செய்திகள் :

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

post image

உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு செந்தில் பப்ளிக் பள்ளி சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

வாரணாசியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் மாணவி லக்ஷயா 600 மீட்டா் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று சிறப்பிடம் பெற்றாா். மற்றொரு மாணவி சங்கநிதி மும்முனை தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். இரண்டு மாணவிகளும் தேசிய அளவிலான எஸ்ஜிஎப்ஐ போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, மாணவிகளுக்குப் பள்ளி சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவா் செந்தில் சி. கந்தசாமி, துணைத் தலைவா் மணிமேகலை கந்தசாமி, செயலாளா் க. தனசேகா், தாளாளா் தீப்தி தனசேகா், நிா்வாக அதிகாரி தி. சுந்தரேசன், முதல்வா் வே.மனோகரன், துணை முதல்வா் நளினி, நிா்வாக அலுவலா் பிரவீன்குமாா், கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டினா். மாணவிகளின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த பயிற்சியாளா்கள் சுரேஷ், பாா்த்திபன், பாரதி ஆகியோருக்கு பள்ளி சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க