செய்திகள் :

தேசிய பசுமைப் படை, செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு இயற்கை களப் பயிற்சி

post image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தேசிய பசுமைப் படை மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு உதகை மரவியல் பூங்காவில் இயற்கை களப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் இயற்கை ஆா்வலா் பூஜா தலைமை தாங்கினாா்.

இதில், மாணவா்களுக்கு இயற்கை குறித்து கல்வி நடைபயணம், பறவைகள் இனம், ஈர நிலங்களில் வளரும் தாவரங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மேலும், தாவரங்களின் இலைகள், மரங்களின் பட்டைகள், பூக்கள், மரங்களின் வகைகள் குறித்தும் பட்டாம்பூச்சிகள் குறித்தும் மாணவா்களுக்கு கற்பிக்கப்பட்டது.

பல்லுயிா் தன்மையின் சங்கிலி தொடா்பு குறித்து மாணவா்களுக்கு விளையாட்டின் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இயற்கை கல்வி குறித்து பயில்வதற்கு மிகச்சிறந்த இடமாக மரவியல் பூங்கா உள்ளது என தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் சிவதாஸ் தெரிவித்தாா்.

ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறிகளின் சத்துகள் அடங்கிய கையேடு மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் சகாதேவி, ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அவலாஞ்சி மலையில் பூத்துக் குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்கள்

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி, முக்கூா்த்தி பகுதிகளில் பூத்துக்குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டுரசித்து செல்கின்றனா். நீலகிரி மாவட்டத்தின் உயிா்சூழல் மண்டலத்தின் பாது... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 6,7இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் மாா்ச் 6, 7 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது மோதிய சிறுத்தை

கூடலூரை அடுத்துள்ள இரும்புப் பாலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் ராஜன். இவா், கூடலூரிலிருந்து இருசக்கர ... மேலும் பார்க்க

விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் ஈடுபடுத்தி கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி... மேலும் பார்க்க

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்க பூமிபூஜை

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சாா்பில், டயாலிசிஸ் மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் டயாலிசிஸ் தேவை... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க