செய்திகள் :

தேனி: ``பள்ளிப் பாதையில் குவியும் குப்பைகள்; நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்'' - பெற்றோர்கள் வேதனை

post image

தேனி அல்லி நகரம் அருகே உள்ள பாரஸ்ட் ரோட்டில் அமைந்துள்ளது நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகளை கொட்டுவதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மூக்கை மூடி கொண்டு சென்று வருகின்றனர்.

பள்ளிப் பாதையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
பள்ளிப் பாதையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

குறிப்பாக இங்கு கொட்டப்படும் குப்பைகள் பறந்து சாலையில் கிடப்பதால் சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் “நான் குழந்தையை பள்ளிக்கு அழைத்து வரும்போது, இந்த இடம் வந்தவுடனே என் பையனை ஓடச் சொல்லிவிடுவேன். அந்தளவிற்கு நாற்றம் தாங்க முடியாது.

நகராட்சியினரும் சில நேரங்களில் மட்டுமே குப்பை எடுத்துச் செல்கிறார்கள்; பெரும்பாலும் பல நாட்கள் அங்கேயே குப்பை குவிந்து கிடக்கிறது,

இந்த பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்துவருகிறது. குப்பைத் தொட்டி வைக்காமலும், குப்பைகளை சரியாக எடுக்காததுமே இதற்கு காரணம். பள்ளி அருகிலேயே இவ்வளவு குப்பை குவிந்து கிடப்பதால் மாணவர்கள் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு நாளும் சென்று வருகிறோம்.

பள்ளியின் அருகே குப்பைகள்
பள்ளியின் அருகே குப்பைகள்

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சுத்தம் செய்து இங்கு ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்" என்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, " அந்த இடத்தை சுத்தம் செய்து குப்பை தொட்டி வைக்கிறோம்" என்றனர்.

'மேயர் பிரியா டு பத்மபிரியா' - தலைநகர் சீட் ரேஸில் திமுக ஜூனியர்கள்? ; விடாப்பிடி சீனியர்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தலைநகர் தொகுதிகளை குறிவைத்து தி.மு.க ஜூனியர் நிர்வாகிகள் காய்நகர்த்தி வருவதை, சீனியர்கள் பலரும் ரசிக்கவில்லை என முணுமுணுக்கிறார்கள் விவரமறிந்த அறிவாலயப் புள்ளிகள். ... மேலும் பார்க்க

``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக அருண்ராஜ் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.தவெக வை அதிமு... மேலும் பார்க்க

"அதிரடி அபராதங்கள்; ஆம்னி பேருந்து விவகாரத்தில் சுமூக தீர்வு வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்ட... மேலும் பார்க்க

`திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுங்க, மறக்கவே மாட்டேன்’ - சரத் பவாருக்கு கிராம இளைஞரின் கோரிக்கை

மகாராஷ்டிரா கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அதுவும் விவசாயம் செய்யும் இளைஞர்கள்தான் இது போன்ற சிக்கல்களை அதிக அளவில் சந்திக்கின்றனர். இதனால் இளைஞர்க... மேலும் பார்க்க

புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (12... மேலும் பார்க்க