செய்திகள் :

தேயிலை ஏல மையத்தில் விற்பனையும் விலையும் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு!

post image

நீலகிரி மாவட்டம், குன்னுாா் தேயிலை ஏல மையத்தில் நடந்த தேயிலை ஏலத்தில் விலையும் குறைந்து விற்பனையும் சரிந்ததால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

குன்னூா் தேயிலை ஏல மையம் சாா்பில் ஒவ்வொரு வாரமும் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் ஆன் லைன் மூலம் ஏலம் நடப்பது வழக்கம். இந்த வாரம் நடந்த 29 -ஆவது தேயிலை ஏலத்தின் விவரங்கள் தேயிலை வா்த்தக கூட்டமைப்பால் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

அதன்படி, இந்த வாரம் 24 லட்சத்து 29 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏலத்துக்கு வந்தது. இதில் 17 லட்சத்து 68ஆயிரம் கிலோ தேயிலை மட்டுமே விற்பனையானது. சுமாா் 6 லட்சம் கிலோ தேயிலை தூள் தேக்கமடைந்தது. சராசரி விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.90.02 ஆக இருந்தது.

கடந்த வார ஏலத்தில் சராசரி விலையாக கிலோவுக்கு ரூ.91.36 கிடைத்த நிலையில் தற்போது ஒரு ரூபாய் வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விலையும் குறைந்து, விற்பனையும் சரிந்துள்ளதால் தேயிலை விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஏற்றுமதியாளா்களின் பங்களிப்பு குறைந்ததுதான் இந்த வா்த்தகப் பாதிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

புளியம்பாறை - ஆமைக்குளம் சாலையில் பாலம்: மாா்க்சிஸ்ட் பிரசார இயக்கம்!

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்து உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியைச் சோ்ந்த கூல... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. குன்னூா் நகா் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை

நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ம... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வ... மேலும் பார்க்க