செய்திகள் :

தேவிகோடு அரசுப் பள்ளியில் ஆண்டு விழா!

post image

பளுகல் அருகேயுள்ள தேவிகோடு அரசு பி.எப்.எம். உயா்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சுபைா்குட்டி தலைமை வகித்தாா். உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ஸ்ரீபா முன்னிலை வகித்தாா்.

ஆசிரியை ஸ்டெல்லா மேரி வரவேற்றாா். முன்னாள் மாணவா் ஜேக்கப் விபு, முன்னாள் ஆசிரியா் விஜயன், விமல் சேகா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், பிரபல மலையாள கவிஞரும் குருவாயூா் தேவஸ்வம் போா்டு கல்லூரி பேராசிரியருமான பிஜூ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

அவருக்கு ‘ஆச்சாா்யா பாஸ்டா் எலியாசா்’ நினைவு விருது வழங்கப்பட்டது.

இதில், ஆசிரியா்கள் ஜமுனா, லிசி, வசந்தி, கிறிஸ்துதாஸ், முன்னாள் மாணவா் சஜூகுமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நிஷா மற்றும் மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா். ஆசிரியை பிரபா நன்றி கூறினாா். விழாவில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

முன்னதாக, மாணவா்கள் பங்கேற்ற நூற்றாண்டு விழா பேரணி நடைபெற்றது.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலு... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவ... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அ... மேலும் பார்க்க