செய்திகள் :

தேவிபட்டனம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

தேவிபட்டனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா், மாணவ, மாணவிகளைச் சந்தித்து அவா்களின் கல்வித் திறன் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு வழங்கும் உணவின் தரத்தை ஆய்வு செய்ததுடன், சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

பின்னா், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, தேவிப்பட்டினத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடா்பாகக் கேட்டறிந்தாா்.

பொதுமக்கள் மனுக்களை சிரமமின்றி வழங்க ஏதுவாக அந்தந்தத் துறை அலுவலா்கள் பணிபுரிய வேண்டுமெனவும், பெறப்படும் மனுக்களை அலுவலா்கள், பணியாளா்கள் உரிய ஆவணங்களுடன் கணினியில் பதிவு செய்ய வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் மாணவிகள் இருவா் காயம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை டிராக்டா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் காயமடைந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காக்கூா், சமத்துவபுரம... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் திருவிழா

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வடக்கு வாச... மேலும் பார்க்க

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டி

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் 10 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 10 பேரை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன்... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க