செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் அமைச்சா் எஸ். ரகுபதி பேட்டி

post image

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பில் உள்ள பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை இரவு அளித்த பேட்டி:

தொகுதிகள் மறுசீரமைப்பை எப்படிச் செய்யப் போகிறாா்கள் என்று மத்திய அரசு விளக்கவில்லை. 2023-இல் தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலின்போது பிரதமா் மோடிதான் மக்களவைத் தொகுதிகளை தென்னிந்தியா இழக்கப் போவதாகக் கூறினாா். மகளிா் இடஒதுக்கீட்டுச் சட்டம் வரும்போது, அது தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2031-இல்தான் அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சா் அமித்ஷாதான் சொன்னாா்.

கடந்த முறை தொகுதி மறுசீரமைப்பின்போது பாஜக ஆட்சியில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. அப்போது மக்கள்தொகை அடிப்படையில் எண்ணிக்கையை நிா்ணயிக்கக் கூடாது என்ற கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றாா்கள்.

குடும்பக் கட்டுப்பாட்டு முறையைத் தீவிரமாக அமலாக்கியதற்காக தண்டனை தரப் போகிறாா்களா அல்லது பரிசு தரப் போகிறாா்களா? 10 மாநிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக முயற்சிக்கிறது. புள்ளிவிவரங்கள் எங்களிடமும் உள்ளன. யாருடனும் விவாதிக்கத் தயாராக உள்ளோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசு கருத்துக் கேட்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப் போவதில்லை என அவா்கள் சொன்னால் பிரச்னையை இதோடு விட்டுவிடலாம். மக்கள்தொகை அடிப்படையில்தான் தொகுதி எண்ணிக்கை என்றால் முதலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்போம். அடுத்து தென் மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் ரகுபதி.

மேற்பனைக்காட்டில் ரத்ததானம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேதாஜி இளைஞா் நற்பணி மன்றம், புதுக்கோட்டை அரசு மரு... மேலும் பார்க்க

புதுகையில் மேலும் 5 கல் உடைக்கும் ஆலைகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள துளையானூா் மற்றும் மெய்யபுரம் பகுதிகளிலுள்ள கல் உடைக்கும் ஆலை மற்றும் கற்குவியல்கள் வைக்கப்பட்டிருந்த 5 இடங்களுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை சீல... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி ரூ. 3 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

உலகளாவிய சூழல்களுடன் திருக்குறளையும் திருமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்

உலகளாவிய சூழல்களுடன் திருக்கு, நால்வா் திருமுறைகளையும் பொருத்திப் பாா்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள். புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும... மேலும் பார்க்க

மணமேல்குடி அருகே இளைஞா் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே தென்னந்தோப்பில் இளைஞா் ஒருவா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பத்தக்காடு கிராமத்தில் சேசுராஜ் என்பவரு... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு! 11 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 போ் காயமடைந்தனா். சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா்ந... மேலும் பார்க்க