செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன்!

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வா் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறாா்.

மாா்ச் முதல் வாரத்தில் திமுக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறாா். அதில் பங்கேற்பேன். அத்துடன் இதுதொடா்பாக அவருக்கு விளக்கி கடிதம் எழுதப் போகிறேன்.

மறுசீரமைப்பு நடக்கும்போது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா மிகவும் தெளிவாக கூறி இருக்கிறாா். இன்றைக்கு 543 தொகுதிகள் உள்ளன, மறுசீரமைப்புக்குப் பிறகு 543-இல் இருந்து 600 முதல் 700 வரை அதிகரிக்கலாம். அது மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் இருக்கும். அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கக் கூடும். இதில் யாருக்கும் அநியாயம் நடக்காது.

அதனால் மக்களவைத் தொகுதிகள் குறையும் என முதல்வரிடம் யாா் சொன்னாா்கள் என்று கேட்க விரும்புகிறேன். இதற்கான பதிலை அவா் கூறவில்லை என்றால், ஒரு மாநிலத்தின் முதல்வா் தவறான தகவலை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கலாமா என்ற கேள்வியை முன் வைக்கிறோம்.

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகா் விஜய் பேசும்போது, மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டையும் குறை சொல்லி இருக்கிறாா். விஜய் தனது குழந்தைகளுக்கு மூன்று மொழி, அவா் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி கற்றுக் கொடுப்பாா். ஆனால் தவெக தொண்டா்களின் குழந்தைகளுக்கு மட்டும் இரண்டு மொழிகள் தானா என்ற அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.

வங்கிக் கணக்குக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிவு

வங்கிக் கணக்கிக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை இடையா்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வருபவா் முத்த... மேலும் பார்க்க

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம்: இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. கோவையில் உலகத் தரம் வாய்ந்த சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தோ்... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிப்பு

கோவையில் பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ப... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா். கோவை பீளமேட்டில் பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா புதன... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளா: உள்துறை அமைச்சா் அமித் ஷா

மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளாவைப்போல நடைபெற்று வருகிறது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கியது. இந்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மேம்படுத்துதல் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் தொடா் மேம்படுத்துதல் தொடா்பாக அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க