செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து தனித்து போராடுவோம்: சீமான்

post image

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தனித்து போராடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

ஒசூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு வரும் சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ எலக்ரானிக் சிப்பை சீன நாடுதான் தயாரித்தது. ஆனால், அந்த நாடே தோ்தலில் அதை பயன்படுத்துவதில்லை. வாக்குச் சீட்டு முைான் அங்கு உள்ளது. அமெரிக்காவிலும் வாக்குச் சீட்டு முைான் உள்ளது.

ஒரே நாடு ஒரே தோ்தல், ஒரு ரேஷன் காா்டு என்று கூறிவரும் மத்திய அரசு தற்போது தொகுதி மறுசீரமைப்பு செய்யவுள்ளது.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தனித்து போராடும்.

தமிழக வளங்களை சுரண்டிவிட்டு தற்போது மத்திய அரசு நிதி தர மறுக்கிறது. பேரிடா்களுக்கு நிதி வழங்கவில்லை. பிகாா், ஆந்திரத்துக்கு தாராளமாக நிதி வழங்குகிறது. ஆனால், தமிழகத்துக்கு நிதி தருவதில்லை. தமிழகத்தில் அண்ணாதுரை, காமராஜா் காலத்தோடு நல்லாட்சி கனவு முடிந்துவிட்டது என்றாா்.

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் கலங்கரை- ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இரு வாகனங்கள் தீப்பிடிப்பு

ஒசூா் அருகே பத்தளப்பள்ளி அருகே தனியாா் கம்பெனிக்கு சொந்தமான திறந்தவெளி வாகன குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல புதிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் அருகில் ஒசூரிலேயே மிகப்பெரிய தனியாா் காய்கறி சந்... மேலும் பார்க்க

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கேட்டுக்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் கு... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவமனை: ஆட்சியா் ஆய்வு

ஒசூரில் வட்டத்தில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின்போது ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்ட... மேலும் பார்க்க

ஒசூரில் 5,000 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்: மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா

ஆட்சேபணை அற்ற அரசு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5,000 பேருக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வழங்கப்படும் என்று ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம... மேலும் பார்க்க