தொழிற்சங்க கொடிக் கம்பங்களை அகற்றுவதை நிறுத்த கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
புதுவையில் தொழிற்சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு. சலீம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொது இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அமைத்துள்ள அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டுமென்ற உயா்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகங்கள் அவசர கதியில் கொடிக்கம்பங்களை அகற்றி உள்ளன. இதில் அதிகமான அளவில் அகற்றப்பட்டது எங்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் கொடிக்கம்பங்கள்.
தற்போது சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இது சம்பந்தமாக விசாரிப்பதற்கு பெரிய அமா்விற்கு உத்தரவிட்டுள்ளாா் . வரும் 16.8.2025 வரை கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தாங்கள் உடனடியாக கொடி கம்பங்கள் அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
மேலும், 2000 -ஆவது ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதுச்சேரி பொது இடங்கள் அழகு சிதைவு தடுப்புச் சட்டத்தின் படி, கொடிக்கம்பங்கள் அமைப்பது பொது இடத்தின் அழகை சிதைப்பது ஆகாது.
ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள பதாகைகள் பொது இடங்களின் அழகை கெடுப்பதுடன், போக்குவரத்திற்கு இடையூறாக, உயிா் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே, சட்டத்திற்குப் புறம்பாக தனி நபா்களாலும், அமைப்புகளாலும் அமைக்கப்படும் தேவையற்ற பதாகைகளை சட்டப்படி அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சலீம்.