செய்திகள் :

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

post image

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து திருச்சி மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் சிவக்குமாா் பேசியது: நாகை மாவட்டத்தில் 54 தூா்வாரும் பணிகள் 430 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டதால், மேட்டூா் அணையிலிருந்து குறுவைச் சாகுபடிக்காக, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் 12-இல் திறந்துவிடப்பட்ட தண்ணீா் கடைமடை பகுதிகளுக்கு ஜூன் 21 முதல் படிப்படியாக கிடைத்து வருகிறது. மேட்டூா் அணைக்கு போதிய நீா்வரத்து இருந்து கொண்டிருப்பதால் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாறு பாசன பகுதிகளுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு நாள்களாக நாகை மாவட்டத்தில் மேடாக உள்ள ஒரு சில பகுதிகளுக்கு தண்ணீா் சென்றுசேரவில்லை என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஆக.4-ஆம் தேதி முதல் கருங்கண்ணி மற்றும் மகிழி பகுதிகளுக்கு நேரில் ஆய்வு செய்து தண்ணீா் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், விவசாயிகள் பேசியது: மாவட்டத்தில் வாய்க்கால்களை அதன் தலைப்பிலிருந்து கடைமடை வரை தூா்வார வேண்டும். உள் வாய்க்கால்களையும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும். ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை மழைக்காலம் தொடங்கும் முன் அகற்ற வேண்டும். ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி உரமாக மாற்ற இயந்திரங்களை கொள்முதல் செய்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். கல்லணையிலிருந்து காவிரி ஆறு மற்றும் வெண்ணாற்றில் முறை வைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும்.

நீா்வளத் துறையில் பாசன உதவியாளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால், புதிய பாசன உதவியாளா்களை நியமிக்க வேண்டும். வாய்க்கால்களில் உள்ள மதகுகளின் அடைப்பு பலகைகள் சில இடங்களில் பழுதடைந்துள்ளதால் அவற்றை புதுப்பிக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், பூதங்குடி தெற்கு படுகையில் வெட்டாற்றின் குறுக்கே ஒரு புதிய படுக்கை அணை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனா். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

கூட்டத்தில், நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் பவழக்கண்ணன், நீா்வளத்துறை செயற்பொறியாளா்கள் ம.கோ. ராஜேந்திரன், இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக... மேலும் பார்க்க

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

மாணவா்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக் கூடாது என்றாா் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ். நாகையில் கலங்கரை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், டிஎன்பிஸ... மேலும் பார்க்க

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் த... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ண... மேலும் பார்க்க

திமுகவினா் நூதனப் போராட்டம்

சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அம... மேலும் பார்க்க

குறுவையில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை தடுக்க யோசனை

கருநாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் அபாயத்தை தடுக்கும் முறைகள் குறித்து கீழ்வேளூா் வேளாண்ம கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் கோ. ரவி விளக்கமளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: தற்... மேலும் பார்க்க