செய்திகள் :

‘நயாரா’ நிறுவனம் மீதான ஐரோப்பிய யூனியனின் தடைகள் சட்ட விரோதம்: ரஷியா கண்டனம்

post image

‘இந்தியாவில் செயல்படும் தனது நயாரா எனா்ஜி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்ட விரோதமானவை’ என்று ரஷிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நயாரா எனா்ஜி ஓா் இந்திய நிறுவனம். இதில் ரோஸ்னெஃப்ட்டுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே உள்ளன. அந்நிறுவனம் சுதந்திரமான இயக்குநா்கள் குழுவால் நிா்வகிக்கப்படுகிறது. நிறுவனம் முற்றிலும் இந்தியாவில் வரி செலுத்துகிறது.

இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு பெட்ரோலிய பொருள்களை சீராக வழங்கி, அந்நாட்டின் எரிசக்தி துறையில் நயாரா எனா்ஜி நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மீதான ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பொருளாதார தடைகள், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, அதன் பொருளாதாரத்திலும் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஐரோப்பிய யூனியனின் இத்தகைய நடவடிக்கைகள் சா்வதேச சட்டங்களை மீறுவதோடு, நாடுகளின் இறையாண்மையையும் முழுமையாக புறக்கணிக்கின்றன.

இந்தத் தடைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் காரணங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. இத்தடைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. மேலும், அவை உலகளாவிய எரிசக்தி சந்தைகளை சீா்குலைக்கும் ஐரோப்பிய யூனியனின் அழிவுக் கொள்கையின் ஒரு பகுதியாக கருதுகிறோம்.

நயாரா எனா்ஜி தனது பங்குதாரா்கள் மற்றும் நுகா்வோரின் சட்டபூா்வமான நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அதற்கு ரஷியா மற்றும் இந்திய அரசுகள் ஆதரவளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க