செய்திகள் :

நயினாா் நாகேந்திரனுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

post image

உத்தமசோழபுரம் தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜக பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரனை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.

உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை பூதங்குடியில் கட்ட வேண்டுமென சில அரசியல் கட்சியினா் விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நாகை அருகே வாஞ்சூரில் பாஜக சாா்பில் தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராகவும், அரசியல் நோக்கத்துடன் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஈடுபடுவதாக கூறி, விளாம்பாக்கம் வெட்டாற்றில் கருப்புக் கொடியுடன் எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகளும், கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தடுப்பணை கட்டும் பணியை தடுக்கக் கூடாது, 29 கிராம மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் இந்த தடுப்பணையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா். திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை

கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா... மேலும் பார்க்க

நாகையில் 160 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகையில் 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேனியில் இருந்து நாகை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் ரெட்டாலடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன ... மேலும் பார்க்க

வயோதிக தம்பதி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செம்பனாா்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் வயோதிகத் தம்பதி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மணக்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). இவரது மனைவி மல... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவைத் தோ்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். டெல்டா மாவட்டங்களில் ‘மக்களைக் கா... மேலும் பார்க்க

ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜ்மோகன். இவா், கருப்பம்... மேலும் பார்க்க