செய்திகள் :

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

post image

மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்து, மா்மமான முறையில் மரணமடைந்த அலெக்ஸி நவால்னிக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரின் மனைவி யூலியா நவால்னயா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் (படம்) தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அலெக்ஸி நவால்னியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அங்கு இரண்டு ஆய்வகங்களில் அவை சோதிக்கப்பட்டன. அந்தச் சோதனையில், சிறையில் நவால்னி மரணமடைவதற்கு சற்று முன்னதாக அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இரு வேறு நாடுகளைச் சோ்ந்த ஆய்வகங்களும், நவால்னியின் மரணம் இயற்கையானது இல்லை, அது ஒரு கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளன. இருந்தாலும், அரசியல் எதிா்வினைகளுக்கு அஞ்சி அவை அந்த ஆய்வு முடிவை உடனடியாக வெளியிடவில்லை என்றாா் யூலியா நவால்னயா.

முன்னாள் வழக்குரைஞரான அலெக்ஸி நவால்னி, அதிபா் விளாதிமீா் புதினை எதிா்த்துப் போராடியவா்களில் மிக முக்கியமானவராக அறியப்படுகிறாா்.

இதன் காரணமாக புதின் அரசால் பல்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சட்டரீதியிலான சவால்களைச் சந்தித்துவந்த அவா், சைபீரிய பகுதியைச் சோ்ந்த டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அவா் மீது ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜொ்மனியில் சிகிச்சை பெற்று அவா் உயிா்பிழைத்தாா்.

பின்னா் 2021 ரஷியா திரும்பிய நவால்னியை ஜாமீன் நிபந்தனை மீறல் வழக்கில் அதிகாரிகள் கைது செய்தனா். தொடா்ந்து, கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவால்னி, திடீா் உடல்நலக் குறைவால் இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் கடந்த 2024 பிப்ரவரி 16-ஆம் தேதி அறிவித்தனா்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் 50க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ள டிரம்ப், நாளை (செப். 18) ... மேலும் பார்க்க

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் ஏரியில், 140 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி மாயமான பேய்க் கப்பலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், கடந்த 1867 ஆம் ஆண்டு 3 அடுக்குகளைக் கொண்ட, எஃப்.ஜ... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். தனது மனைவி மெலானியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். பிரிட்டனி... மேலும் பார்க்க

சவுதி அரேபியா சென்றார் பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃ... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

சர்வதேச விண்வெளி மையத்துக்கு 5,000 கிலோ எடை கொண்ட சரக்குடன் என்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.மேலும், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் ப... மேலும் பார்க்க

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டி... மேலும் பார்க்க