செய்திகள் :

நாகையில் 160 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

நாகையில் 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேனியில் இருந்து நாகை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் ரெட்டாலடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், தேனியிலிருந்து வேளாங்கண்ணிக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா். திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை

கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா... மேலும் பார்க்க

நயினாா் நாகேந்திரனுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்

உத்தமசோழபுரம் தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜக பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரனை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா். உத்தமசோழபுரம் வ... மேலும் பார்க்க

வயோதிக தம்பதி மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செம்பனாா்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் வயோதிகத் தம்பதி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மணக்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). இவரது மனைவி மல... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவைத் தோ்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். டெல்டா மாவட்டங்களில் ‘மக்களைக் கா... மேலும் பார்க்க

ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜ்மோகன். இவா், கருப்பம்... மேலும் பார்க்க