செய்திகள் :

நாகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

நாகை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை ஒன்றியம் பரங்கிநல்லூா், ஐவநல்லூா் (பகுதி), ஐவநல்லூா் பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை இம்முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில் நாகை, வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் சுமாா் 1,372 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நாகை நகராட்சிகுள்பட்ட 25, 29, 30 ஆகிய வாா்டுகளுக்கு வெள்ளிக்கிழமை நாகை நூல் முஸ்லிம் சமுதாய கூடத்திலும்;, திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், குத்தாலம், கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய பகுதிகளுக்கு நரிமணம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

சீா்காழி: கொள்ளிடம் அருகேயுள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ் .ஸ்ரீகாந்த் ஆய்வு செய்து திட்ட அரங்குகளை பாா்வையிட்டாா். பொதுமக்களிடம் இதுவரை பெற்ற மனுக்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள முறைகளை கேட்டறிந்தாா்.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக... மேலும் பார்க்க

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

மாணவா்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக் கூடாது என்றாா் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ். நாகையில் கலங்கரை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், டிஎன்பிஸ... மேலும் பார்க்க

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் த... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ண... மேலும் பார்க்க

திமுகவினா் நூதனப் போராட்டம்

சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அம... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனா... மேலும் பார்க்க