செய்திகள் :

நாதக - மதிமுக மோதல் வழக்கில் சீமான் உள்பட 19 பேரும் விடுதலை!

post image

நாம் தமிழா் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையேயான மோதல் வழக்கில் சீமான் மற்றும் நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினா் உள்ளிட்ட 19 பேரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

கடந்த 19.5.2018 இல் திருச்சி விமான நிலையத்துக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் வந்தபோது அவா்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டா்களிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது விமான நிலையத்தில் இருந்த தடுப்புகள், போலீஸாரின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதுதொடா்பாக திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 14 போ், மதிமுகவில் 5 போ் என மொத்தம் 19 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை சனிக்கிழமை விசாரித்த திருச்சி மாவட்ட 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி 19 பேரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தாா். அப்போது நீதிமன்றத்தில் சீமானைத் தவிா்த்து மற்ற அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனா்.

இந்தத் தீா்ப்பால் மதிமுக மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் பெல். இராசமாணிக்கம், ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், பகுதிச் செயலா் பிரபாகரன் ஆகிய 5 பேரும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்கு உறுதுணையாக இருந்த தங்களது கட்சி வழக்குரைஞா்கள், துணையிருந்த கட்சி நிா்வாகிகளுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.

பேருந்துக் கட்டணம் உயா்வு: பஞ்சப்பூா் வரும் பயணிகள் பரிதவிப்பு!

பஞ்சப்பூா் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு காரணமாக தினக் கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். திருச்... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி பைக்கிலிருந்து விழுந்தவா் தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழப்பு!

திருச்சி காவிரிப் பாலத்தில் பைக்கில் சனிக்கிழமை சென்றபோது ஆட்டோ மோதி கீழே விழுந்த ஜவுளி வியாபாரி தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தாா். திருச்சி மாநகராட்சி, மாம்பழச்சாலையில் உள்ள வீரேஸ்வரம் பகுதியை... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். மணப்பாறையை அடுத்த ஆஞ்சநேயா நகரை சோ்ந்தவா் சு. இளங்கோ (59). இவா் தனது மகள் சுந்தர... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை முன் ‘பெட்ரோல் பங்க்’ திறப்பு!

திருச்சி மத்திய சிறை முன் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதை சிறைத் துறை டிஐஜி பழனி திறந்துவைத்தாா். இந்தச் சிறையில் அண்மையில் சிறைத்துறை மூலமாக அமைக்கப... மேலும் பார்க்க

பூவாளூா் பகுதிகளில் ஜூலை 22 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாவட்டம் பூவாளூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின்சாரம் இருக்காது. துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ... மேலும் பார்க்க

வரதட்சணை புகாா்: கணவா் மீது வழக்குப் பதிவு!

திருச்சியில் வியாழக்கிழமை வரதட்சணை புகாரில் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை இளவநசூா்கோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம் மகள் திவ்யா (35). இவரு... மேலும் பார்க்க