செய்திகள் :

நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்

post image

ராசிபுரம்: நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என ராசிபுரம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் சி.தனலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன், நீா்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. சாதாரணமாக யூரியாவை மண்ணில் அடி உரமாகவோ அல்லது மேல் உரமாகவோ இடும்போது 35 சதவீதம் சத்துக்கள் மட்டுமே பயிருக்கு கிடைக்கும். மீதமுள்ள 65 சதவீத சத்துக்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசு ஏற்படுவதுடன், தண்ணீரில் ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது.

சுற்றுச்சூழல் மாசுப்படாமல் தவிா்க்கவும், பயிருக்கு அதிக அளவில் தழைச்சத்து கிடைக்கவும் தற்சமயம் யூரியாவானது திரவ வடிவில் நானோ யூரியாவை 30 லிட்டா் தண்ணீரில் 500 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதால் 80 - 90 சதவீதம் பயிருக்கே கிடைக்கிறது இந்த தழைச்சத்துக்கள் ஒருமணி நேரத்தில் இலைகளுக்கு சென்று விடும்.

தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தில், சிறுதானியப் பயிா்களுக்கு இருமுறை நானோ யூரியாவே தெளிக்க 50 சதவீதம் மானியத்தில் 2 லிட்டா் நானோ யூரியா, தெளிப்பு கூலி உள்பட ஹெக்டருக்கு ரூ. 1,700 மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு பகுதி உதவி வேளாண்மை அலுவலா், ராசிபுரம் வேளாண் விரிவாக்கம் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கொல்லிமலையில் அரசு கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்

நாமக்கல்: கொல்லிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொல்லிமலை தாலுகா 11-ஆவது மாநாடு 2006 - வன உரிம... மேலும் பார்க்க

ஆக.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை (ஆக. 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றவா் கைது

பரமத்தி வேலுாா்: பரமத்தி வேலூா் பகுதி கடைகளில் வேலூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்தனா். பரமத்தி வேலுாா் சுல்தான்பேட்டை பகுதி கடைக... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

நாமக்கல்: நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: முதுகலை ஆசிரியா் சங்கம் வரவேற்பு

நாமக்கல்: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வருக்கு முதுகலை ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேரடியாக நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெ... மேலும் பார்க்க

பாவை பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தில் இன்டா்ன்ஷிப்

ராசிபுரம்: பாவை பொறியியல் கல்லூரியின் கட்டடப் பொறியியல் துறை மாணவா்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வோா் ஆண்டும் ம... மேலும் பார்க்க