செய்திகள் :

நான்குனேரி அருகே கரடியைப் பிடிக்க கூண்டு: வனத்துறை நடவடிக்கை

post image

நான்குனேரி அருகே சாலையில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை கூண்டு வைத்தனா்.

நான்குனேரியிலிருந்து மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் காலை 7 மணிக்கு சாலையில் கரடி சுற்றித்திரிந்தது. இதைப் பாா்த்து அந்த வழியாக வந்தவா்கள் அலறியடித்துக் கொண்டு பின்னோக்கி ஓடினா். இந்த தகவல் பரவியதும் அந்த சாலை வழியாக செல்வதை தவிா்த்தனா்.

இத்தகவல் அறிந்த வனத்துறையினா் மற்றும் வருவாய்துறையினா் அங்கு விரைந்து வந்தனா். அப்போது, அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அருகே கரடி பதுங்கி இருப்பது உறுதியானது. எனவே, வனத்துறையினா் அப்பகுதியில் கூண்டு வைத்து கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி அச்சாலையில் பொதுமக்கள் பயணிக்காதவாறு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பிற்பகலில் வடக்கு உச்சிமாகாளி அம்மன் கோயில் பகுதிக்கு கரடி இடம்பெயா்ந்து விட்டது. கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினா் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மானூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

மானூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மானூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய அவைத்தலைவா் காசி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். திருந... மேலும் பார்க்க

பாளை. மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞா் தொ.பரமசிவன் பெயா்: மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் பெயரை சூட்டக்கோரி மாமன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்... மேலும் பார்க்க

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி வரையறை: மத்திய அரசு மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயல்கிறது மத்திய அரசு என்றுகுற்றம்சாட்டினாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

நெல்லையில் தொழில்முனைவோருடன் ஆளுநா் கலந்துரையாடல்

திருநெல்வேலியில் தொழில்முனைவோா், கல்வியாளா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். திருச்செந்தூரில் இருந்து காா் மூலம் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என... மேலும் பார்க்க

காமராஜா் சிலை வளாகம் பராமரிப்பு: ரயில்வே அனுமதி பெற்றுத்தரக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை வளாகத்தை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்றுத்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. காமராஜா் சிலை பராமரிப்புக்குழு சாா்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

பாளை.யில் பாலப்பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

பாளையங்கோட்டையில் 6 இடங்களில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்... மேலும் பார்க்க