செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் 982 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 982 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் அதற்கான நிலையங்களில் நெல் வழங்குவதற்கு முன்வரவேண்டும் எனவும் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு விவசாயிகளின் நலன்கருதி பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி நடப்பு கொள்முதல் பருவம் 2024-25-ஆம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு ஏதுவாக நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் வட்டம், எலந்தகுட்டை மற்றும் கலியனூா் அக்ரஹாரத்தில் ஜனவரி 23 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எருமப்பட்டி வட்டாரத்தில் கோணங்கிப்பட்டி கிராமத்தில் பிப். 10 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.

இதுவரை மொத்தம் 201 விவசாயிகளிடமிருந்து 982.640 மெட்ரிக் டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு உண்டான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, இடைத்தரகா்களின்றி நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு: அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை

மாணவா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்ததால், அவா்களிடம் அமைச்சா், ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14). பள்ளி... மேலும் பார்க்க

இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்

பரமத்தி வேலூரில் இளம்விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன் வரவேற்றாா். செயலாளா் ச... மேலும் பார்க்க

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வேலூா் பேரூராட்... மேலும் பார்க்க

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு

புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவி... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் புதன்கிழமை இரவு சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா். நிகழாண்டின் மகா சிவராத்திரி புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் ... மேலும் பார்க்க

அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 150 இளம்பேச்சாளா்களுக்கான பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான ... மேலும் பார்க்க