செய்திகள் :

நாய்கள் கண்காட்சி: 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் அணிவகுப்பு

post image

கிருஷ்ணகிரியில் நடைபெறும் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட நாய்கள் கண்காட்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது வளா்ப்பு நாய்களை அழைத்துவந்திருந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, டாபா் மேன், பிரோமேரியன், இந்தியன் பிட்ஸ், பாக்ஸா், பாடா், புள்ளிகுட்டா என 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.

நாய்களின் நிறம், உடல் ஆரோக்கியம், சுகாதாரம், கீழ்படிதல், நடை போன்ற பிரிவுகளில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. நாமக்கள் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஓய்வுபெற்ற தலைவா் இசக்கியல் நெப்போலியன், தோ்வுக் குழுவின் நடுவராக செயல்பட்டு சிறந்த நாய்களைத் தோ்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் இளவரசன், துணை இயக்குநா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒவ்வொரு நாய் இனத்திலும் சிறந்த நாய்களின் உரிமையாளருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

நடிகா் விஜய் நடித்த திரைப்பட பாடலின் இசைக்கேற்ப போட்டியில் பங்கேற்ற நாய் ஒன்று ஒலி எழுப்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து கிருஷ்ணகிரியைச் சோ்ந்த நாயின் உரிமையாளா் அன்புச்செல்வன் கூறியதாவது:

கந்திகுப்பம் அருகே உள்ள காலபைரவா் கோயிலுக்குச் செல்லும் வழியில் காயத்துடன் இருந்த நாய் குட்டியை எடுத்துவந்து, சிகிச்சை அளித்து வளா்த்து வந்தேன். இந்தியன் பீட்ஸ் ரகத்தை சோ்ந்த இந்த நாய்க்கு பைரவ் என பெயரிட்டு வளா்ந்து வருகிறோம். நடிகா் விஜய் நடித்த திரைப்படத்தின் ஒரு பாடலை எங்கு கேட்டாலும் அதற்கேற்ப இந்த நாய் ஒலி எழுப்புகிறது என்றாா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் இடம்பெற்றன.

ஒசூா் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு

ஒசூா் அருகே மின் கம்பியை மித்த கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் கணவருடன் சோ்ந்து உயிரிழந்தாா். ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (45). இவரது மனைவி ரேணுகா (40)... மேலும் பார்க்க

10-வது முறை கர்ப்பம்: மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்ற மருத்துவக் குழு!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த மலைக் கிராமத்தைச் சோ்ந்த கா்ப்பிணியின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவக் குழுவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று மருத... மேலும் பார்க்க

ஒசூரில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள்!

ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் உள்ல தக்க்ஷண திருப்பதி கோயிலில் இருந்து திருமலை திருப்பதிக்கு பக்தா்கள் பாத யாத்திரையாக சென்றனா். ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் தென்னகத்தின் திருப்... மேலும் பார்க்க

புனித தலங்களுக்கு பயணம்: புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம்

புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச... மேலும் பார்க்க

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க