செய்திகள் :

'நீங்கள்தான் பொறுப்பு' இண்டிகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'Show-cause Notice'; தவறினால்?

post image

கடந்த சில நாள்களாக, இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் பயணங்கள் ரத்தாகி வருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

என்ன பிரச்னை?

சமீபத்தில் இந்திய அரசு கொண்டு வந்த விமானக் கடமை நேர வரம்புகளுடன் (FDTL) இண்டிகோ நிறுவனத்தால் ஒத்துப்போக முடியாததே இந்த நிலைக்குக் காரணம்.

புதிய விமானக் கடமை நேர வரம்புகள் படி, ஒவ்வொரு விமானிக்கும் குறிப்பிட்ட பயணம்‌ அல்லது நேரத்திற்கு பிறகு கட்டாயமாக ஓய்வு கொடுக்கவேண்டும்.‌ இப்படியான பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸ்| Pieter Elbers
இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸ்| Pieter Elbers

ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றும் அளவிற்கு இண்டிகோ நிறுவனத்திடம் ஊழியர்கள் இல்லை‌. இந்திய அரசு கொடுத்த நேரத்திற்குள் அதை ஏற்பாடு செய்யவும் இண்டிகோ நிறுவனம் தவறிவிட்டது.

இதனால் தான், தினமும் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்தாகி வருகிறது. வரும் 15-ம் தேதி முதல் அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பாணை

இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 'விளக்கம் கோரல் அறிவிப்பாணை (Showcause Notice)' அனுப்பியுள்ளது.

அந்த அறிவிப்பாணையில், "தலைமை நிர்வாக அதிகாரியாக, விமானப் பயணங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு.

தகுந்த ஏற்படுகளைச் செய்யவேண்டிய பொறுப்பிலிருந்து தவறிவிட்டீர்கள்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கவேண்டும். இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த அறிவிப்பாணைக்கு பதிலளிக்கப்படவில்லை என்றால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

அலுவலக நேரத்திற்கு பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா

கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை‌ முன்மொழிந்துள்ளார்.என்ன மசோதா?சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அளித்தது. அதன்படியில் புதுச்சேரி மேட்டு... மேலும் பார்க்க

சேலம்: ``தறி ஓட்டுனா பொண்ணு தரவே யோசிக்கிறாங்க'' - நிலைமையை சொல்லும் கைத்தறி நெசவாளர்கள்

சோறு எப்படி வருது என்று கேட்டால், இப்போதைய பிள்ளைகள் "வயலில் இருந்து வருது" என்று சொல்வது போல, நாம் உடுத்துகிற ஆடை எப்படி உருவாகிறது என்று கேட்டால், பலருக்கும் தெரியாது. நூல்களையெல்லாம் ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க