ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!
நீலகிரி: மின் கம்பத்தின் கீழ் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் சிறுத்தை; வனத்துறை சொல்வது என்ன?
சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலகிரி வனக்கோட்டத்தில் மேலும் ஒரு பெண் சிறுத்தையின் பரிதாப இழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஃபாரஸ்ட் டேல் பகுதியில் மின்கம்பத்தின் கீழ் சிறுத்தை ஒன்று இறந்து கிடைப்பதாக நேற்று காலை வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்த வனத்துறையின் களப்பணியாளர்கள், சிறுத்தையின் இறப்பை உறுதி செய்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
கால்நடை மருத்துவர்களுடன் சென்ற அதிகாரிகள், இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்திருக்கிறார்கள். இறந்து கிடந்தது சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்றும் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். உடல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறையினர், "இந்தப் பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் காணப்படுவது இயல்புதான். நேற்று முன்தினம் இரவு இரண்டு கரடிகள் சேர்ந்து இளம் சிறுத்தையை விரட்டி சண்டையிடுவதை தேயிலைத் தொழிற்சாலை பணியாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
கரடிகளுக்குப் பயந்த அந்தச் சிறுத்தை அருகிலிருந்த மின் கம்பத்தின் உச்சி வரை ஏறியிருக்கிறது.

மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்து கீழே விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது. முன்னங்கழுத்து பகுதியில் கரடிகள் தாக்கியதைப் போன்ற இரண்டு காயங்கள் உள்ளன.
அதேபோல் முதுகு பகுதியில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உடற்கூறாய்வு முடிவுகள் வந்தால் மட்டுமே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.