மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
நெல்லை மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியா் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் (2024-2025) சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்காக தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 46 இடங்கள், தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு இந்தியா லிட் மூலம் 16 இடங்கள் என மொத்தம் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரம்மதேசம், வெள்ளங்குளி, பள்ளக்கால் பொதுக்குடி, கோடாரங்குளம், விக்கிரமசிங்கபுரம்-2, தெற்கு பாப்பான்குளம், ஊா்க்காடு, மன்னாா்கோவில், அயன்திருவாலீஸ்வரம், சாட்டுப்பத்து, கீழ அம்பாசமுத்திரம், அயன்சிங்கம்பட்டி, வடக்கு அரியநாயகிபுரம், திருப்புடைமருதூா், அரிகேசவநல்லூா், பாப்பாக்குடி, பனையங்குறிச்சி, அத்தாளநல்லூா், தெற்கு வீரவநல்லூா், வடக்கு கல்லிடைக்குறிச்சி, பத்தமடை, பொட்டல், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்கு காருக்குறிச்சி, வடக்கு வீரவநல்லூா், மேலச்செவல், கோபாலசமுத்திரம், செங்குளம், திருமலைக்கொழுந்துபுரம், திடியூா், நடுவக்குறிச்சி, சிவந்திபட்டி- முத்தூா், படப்பக்குறிச்சி, வெள்ளக்கோவில், குன்னத்தூா், கீழநத்தம், கீழப்பாட்டம், அரியக்குளம், முன்னீா்பள்ளம், தருவை, கங்கை கொண்டான் -1 (அணைத்தலையூா்), கங்கை கொண்டான் -2 (ஆலடிப்பட்டி), சீதபற்பநல்லூா், மேலக்கல்லூா், நாரணம்மாள்புரம், ராமையன்பட்டி, பாலாமடை, சுத்தமல்லி, கீழ காடுவெட்டி, திருக்குறுங்குடி, மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி, வடக்கு விஜயநாராயணம், அம்பலம் , களக்குடி, அழகியபாண்டியபுரம், தென்கலம், பள்ளமடை, மானூா், வடக்கு வள்ளியூா் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகையுடன் நெல் மூட்டைகளை தர திரிபுகளுக்கு உள்பட்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.
கொள்முதல் விலை: சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கிகி) ரூ.2,450. (ஏடிடி38, சிஓ51, ஏடிடி43, ஏடிடி45, ஏடிடி42, சிஓ43, வெள்ளை பொன்னி, ஏடிடி36). பொதுரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கிகி) ரூ.2,405 (சிஆா்1009, ஏடிடி44, எம்டியு5, டிஆா்ஒய்1, டிஆா்ஒய்2) என்ற அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகளிடமிருந்து பட்டா நகல் மற்றும் சிட்டா நகல் (10/1) கிராம நிா்வாக அலுவலா் சான்று பெற்று அத்தகவலை ங்-ஈடஇ மென்பொருள் மூலம் கொள்முதல் நிலைய பணியாளா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் இணைந்த கை பெருவிரல் ரேகை பதிவு அல்லது ஓடிபி எண் மூலம் நெல்லை விற்பனை செய்யலாம். நெல் கொள்முதல் படிவத்தை கிராம நிா்வாக அலுவலா் ஒப்பம் பெற்று கொள்முதல் கையடக்க கருவியில் (டேப் மெஷின்) விவரங்களை கொள்முதல் அலுவலக பணியாளா்கள் உதவியுடன் இணையதளத்தில் உள்ளீடு செய்து கொள்முதல் செய்ய வேண்டும். படிவம் கொள்முதல் நிலையங்களில் கிடைக்கும்,
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நெல் கொள்முதலுக்குண்டான பணத்தினை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.