செய்திகள் :

நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் சிக்கும் அதிகாரிகள்?

post image

நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக சரவணபாபு, நெல்லை மாநகரக் காவல் ஆணையாளர் சந்தோஷிடம் புகார் அளித்தார்.

சரவணபாபு

இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரலைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆனந்த் மற்றும அவரது உறவினர் முத்துசுடலை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், துணை இயக்குநர் அலுவலகத்தில் நள்ளிரவில் பணத்தை வைத்தது மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த விஜய் என்பது விசாரணையில் தெரியவந்தது. மும்பை தாராவியில் தலைமறைவாக இருந்த விஜய்யைக் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.40 ஆயிரம் பணத்தை கூலியாகப் பெற்றுக் கொண்டு அதிகாரியின் அலுவலகத்திற்குள் பணத்தை வைத்துச் சென்றது தெரிய வந்தது. அவரும் இது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் தீயணைப்பு வீரரான மூர்த்தி மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான முருகேஷ் ஆகிய இருவரையும் நெல்லை மாநகர போலீஸார் கைதுசெய்தனர்.

துணை இயக்குநர் அலுவலகம்

இதில், தீயணைப்பு அலுவலகத்தில் பணத்தை வைக்க விஜய்க்கு முருகேஷ் உதவியதாகக் கூறப்படுகிறது. இவரின் சொந்த ஊர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஆகும். இந்த விவகாரத்தின் பின்னணியில் நெல்லை மாவட்டத்தின் தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் திருப்பூரில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் போலீஸாரிடம் சிக்கியுள்ளதால், தீயணைப்புத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. துணை இயக்குநர் அலுவலகத்தின் சாவியை விஜய்யிடம் கொடுத்தது யார்? சாவியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிகாரி யார்?

போலீஸார் விசாரணை

விஜய் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த தீயணைப்பு துறை சீருடை யாருடையது? லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரகசிய தகவலை கசிய விடுவது யார்? என பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.

மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!

மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இர... மேலும் பார்க்க

'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' - எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இ... மேலும் பார்க்க

ஒரு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு மற்றொரு சிறுமியுடன் எஸ்கேப் - கேரள வாலிபரை தூக்கிய குமரி போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர்... மேலும் பார்க்க

`மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி' -தீர்ப்பு குறித்து நடிகர் திலீப்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்றுவரும் எர்ணாகுளம் பிரி... மேலும் பார்க்க

நெல்லை: `லஞ்ச புகாரில் சிக்கவைக்க சதி' - அலுவலகத்தில் பணம் வைத்தவர் கைது; விசாரணையில் அதிர்ச்சி

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் தீயணைப்புத்துறை மண்டலம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக சரவண பாபு பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நட... மேலும் பார்க்க

Dileep: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; ஏ1 முதல் ஏ6 வரைதான் குற்றவாளிகள்; திலீப் விடுவிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். காரில் வை... மேலும் பார்க்க