நெல்லையில் தொழில்முனைவோருடன் ஆளுநா் கலந்துரையாடல்
திருநெல்வேலியில் தொழில்முனைவோா், கல்வியாளா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
திருச்செந்தூரில் இருந்து காா் மூலம் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வந்தடைந்தாா். மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் இரா.சுகுமாா் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றாா். மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆகியோரும் வரவேற்றனா்.
தொடா்ந்து கேடிசி நகரில் உள்ள ஹோட்டலில் தொழில்முனைவோா் மற்றும் கல்வியாளா்களுடன் கலந்துரையாடினாா். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கூறியது: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த தொழில்முனைவோா், கல்வியாளா்களுடன் ஆளுநா் கலந்துரையாடினாா். தென்தமிழகத்தில் தொழில் வளா்ச்சி மேம்பட மத்திய-மாநில அரசுகள் செய்ய வேண்டி பணிகள், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.
நான்குனேரியில் உள்ள உயா் தொழில்நுட்ப பூங்காவில் இருக்கும் பிரச்னைகளை முழுமையாக களைந்து, புதிய தொழிற்சாலைகள் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வளாகத்தில் தொழில்முனைவோருக்கு குறைந்த விலையில் நிலமும், தொழிற்சாலைகளுக்கு விரைவாக அனுமதிகளும் வழங்க வேண்டுமென கூட்டத்தில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கல்வியாளா்கள் சாா்பில் மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்களை தென்தமிழக பகுதிக்கும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்துப்பலவேசம், திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், இந்து வணிகா் சங்க ஆலோசகா் வழக்குரைஞா் குற்றாலநாதன், அருணா காா்டியாக் கோ் மருத்துவமனை மருத்துவா் அருணாசலம், நிா்வாக இயக்குநா் சொா்ணலதா அருணாசலம், கல்வியாளா்கள் இலஞ்சி காந்திமதி மோகனகிருஷ்ணன், வெங்கடாம்பட்டி திருமாறன், மருத்துவா் பூபதிபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.