செய்திகள் :

நைஜரில் பயங்கரவாதிகளால் இந்தியர் கடத்தல்! மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

post image

நைஜரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நைஜரின் டோசோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி, அங்குள்ள கட்டுமானப் பணிகளுக்கு, அந்நாட்டு ராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அப்போது, அங்கு திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவரை அந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக, நைஜர் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கடத்தப்பட்ட ரஞ்சித் சிங்கின் மனைவி ஷீலா தேவி கூறுகையில், ஜூலை 15 முதல் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. பலமுறை விசாரித்த பிறகுதான், பயங்கரவாதிகள் அந்த இடத்தைத் தாக்கியதாகவும், ரஞ்சித், ஒரு காட்டுப் பகுதியை நோக்கி ஓடிவிட்டதாகவும் நிறுவனம் குடும்பத்தினருக்குத் தெரிவித்தது.

தனது கணவரின் விடுதலைக்காக நிறுவனம் எந்த வெளிப்படையான முயற்சிகளையும் எடுக்கவில்லை. எங்களுக்கு மூன்று குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். அவரது கடத்தல் அவர்கள் பற்றி கேள்விப்பட்ட பிறகு அதிர்ச்சியில் உள்ளனர். தயவுசெய்து என் கணவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வாருங்கள். தனது கணவர் பாதுகாப்பாக திரும்புவதை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

மேலும் இதுதொடர்பாக ராம்பன் துணை ஆணையர் முகமது அலியாஸ் கானையும் ஷீலா தேவி சந்தித்துள்ளார். அப்போது இவ்விவகாரம் நைஜரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் எடுத்துச் செல்லப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

A man from Jammu and Kashmir’s Ramban district has reportedly been abducted by terrorists in Niger, West Africa, during a deadly attack on a construction site in the Dosso region.

கிர்ப்டோ பணப் பரிமாற்ற நிறுவனம் முடக்கம்: வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் முன்னணி நிறுவனமான காயின் டி.சி.எக்ஸ். மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.கடந்த 19ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தால், இந்த தளத்திலிருந்து 44 மில்லியன் டாலர்கள் (ரூ... மேலும் பார்க்க

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார். கிராம மக்கள் முன்னிலையில்... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கியதில் பலி !

மத்தியப் பிரதேசத்தில் மீன்படிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் டோரியா டெக்கிற்கு அருகிலுள்ள கென் ஆற்றில் பாயும் ஓட... மேலும் பார்க்க

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!

மகாராஷ்டிரத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள மிரா சாலையில் வசித்து வரும் தனியார் விமான நிறுவனத்தைச் சேர்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் கேஜரிவால் சந்திப்பு

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேரிவால் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாநிலங்க... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு!

மங்களூரு: மங்களூரு அருகேயுள்ள தர்மஸ்தலா பகுதியில் மண்ணுக்குள் சுமார் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அடுத்தடுத்து சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.தர்மஸ்தலாவில் அமைந்துள்ள ஸ... மேலும் பார்க்க