செய்திகள் :

பக்குவமடைந்த தலைவன் ரோஹித் சர்மா..! மனம் திறந்த ஷிகர் தவான்!

post image

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, அவருடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக ரோஹித், தவான் கூட்டணியில் கடந்த பத்தாண்டுகளாக சிறப்பாக விளையாடி வந்தார்கள். தற்போது ரோஹித் சர்மா இளம் வீரர்களுடன் சேர்ந்து நன்றாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஷிகர் தவான் கூறியதாவது:

2013லிருந்து 2015 வரை ரோஹித் சர்மா பல அனுபவங்களைப் பெற்றுள்ளார். அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டுமென அவருக்குத் தெரியும். ஒரு தலைவனாக அவர் பக்குவமடைந்துள்ளார்.

வீரர்களுடன் இணக்கமாக பழகும் ரோஹித்

எப்போது இணக்கமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும்.

ரோஹித் சர்மா வீரர்களுடன் பழகுவது அற்புதமாக இருக்கிறது. அது ஒரு நல்ல சமநிலையாக இருக்கிறது.

என்னை தொடக்க வீரராக இறங்க தோனி முடிவெடுத்தார். நான் அப்போது புதியதாக இருந்தேன். என்னுடய சொந்த உலகத்தில் இருந்தேன். கம்பேக் கொடுத்து நன்றாக விளையாட வேண்டிய சூழல் இருந்தது. ரோஹித்துடன் இறங்க வேண்டுமென இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ரோஹித்துடன் நெடுங்கால நட்பு

முதல் போட்டியிலேயே 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். முதல் 10 ஓவர்களில் 30-35 ரன்கள் எடுத்தோம். பந்து திரும்பிக் கொண்டுள்ளதால் பொறுமையாக இருந்தோம். நாங்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவோமென நினைக்கவில்லை.

நாங்கள் ஒருவரையொருவர் நம்பினோம். இருவரும் நல்ல விதமாக பேசிக்கொள்வோம். ஆடுகளத்திலும் அதற்கு வெளியேவும் நாங்கள் ஒரே மாதிரி இருந்தோம். நாங்கள் ஒன்றாக விளையாடி பல தொடர்களை வென்றுள்ளோம்.

யு-19 கிரிக்கெட்டில் ரோஹித்துக்கு 16-17 வயதிலிருக்கும்போதே நாங்கள் ஒன்றாக விளையாடியுள்ளோம். அப்போதிலிருந்தே நாங்கல் நண்பர்களாக இருக்கிறோம் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலக இதுவே பிரதான காரணம்: மிட்செல் ஸ்டார்க்

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குரூப் - ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிற... மேலும் பார்க்க

வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழு... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நே... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகி... மேலும் பார்க்க