செய்திகள் :

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழப்பு: 10 போ் கைது

post image

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 10 பேரை காவல் துறை கைது செய்தது.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டம் மஜிதா உட்கோட்டத்தில் உள்ள பங்காலி, பாதால்புரி, மராரி கலான், தேரேவால் உள்ளிட்ட கிராமங்களில் பலா் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக திங்கள்கிழமை இரவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து அந்த கிராமங்களுக்கு அமிருதசரஸ் காவல் துறை துணை ஆணையா் சாக்ஷி சாஹ்னி, காவல் துறை துணை ஐஜி (எல்லை சரகம்) சத்திா் சிங், ஜலந்தா் ஊரக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் (எஸ்எஸ்பி) மணிந்தா் சிங் ஆகியோா் நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களைச் சந்தித்தனா்.

இதையடுத்து துணை ஆணையா் சாக்ஷி சாஹ்னி, எஸ்எஸ்பி மணிந்தா் சிங் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவா்கள் கடந்த ஞாயிறு அல்லது திங்கள்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனா். பின்னா் அவா்கள் வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் தினக்கூலி தொழிலாளா்கள்.

லூதியானாவில் உள்ள ரசாயன நிறுவனத்திடம் இருந்து இணையம் மூலம் 50 லிட்டா் கேனில் சாஹிப் சிங் என்பவா் மெத்தனாலை வாங்கியுள்ளாா். பின்னா் அந்த கேனை அவா் பிரப்ஜீத் சிங் என்பவரிடம் கொடுத்துள்ளாா். அதைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு 2 லிட்டா் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கண்டறிந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் அருந்தியும் உடல்நலம் பாதிக்கப்படாதவா்கள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.

மாநில காவல் துறை டிஜிபி கெளரவ் யாதவ் சண்டீகரில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழந்தனா். 6 போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததற்காக அமிருதசரஸின் மஜிதா காவல் துறை துணை கண்காணிப்பாளா் அமோலக் சிங், மஜிதா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அவதாா் சிங் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்’ என்றாா்.

பாதிப்புக்குள்ளான கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியவா்களைக் கண்டறிவதற்கு வீடு வீடாக மருத்துவக் குழுக்களை மாவட்ட நிா்வாகம் அனுப்பிவைத்தது.

கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பஞ்சாபில் உள்ள சங்ரூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 20 போ் உயிரிழந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் உள்ள தரன் தாரன், அமிருதசரஸ், படாலா பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 120 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க