செய்திகள் :

படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

post image

அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரைக் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. குஜராத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது தாக்கரேவின் பேச்சு.

இதையடுத்து, அரசியல் ஆதாயத்துக்காக தேசிய தலைவர்களை அவமதித்து பேசுவதாக தாக்கரேவுக்கு ‘பட்டிதார்’ சமூகத்தைச் சேர்ந்தோரும் ஆம் ஆத்மி கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

கடந்த ஜூலை 18-ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசிய தாக்கரே, குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களும் தலைவர்களும் மகாராஷ்டிரத்திலிருந்து மும்பையை பிரிக்க நினைத்தனர் என்றார். அப்போது அவர் வெளிப்படையாக படேல் சமூகத்தை தாக்கி சர்தார் படேல் மற்றும் மொரார்ஜி தேசாய் பெயர்களை குறிப்பிட்டதால், குஜராத்தில் தாக்கரே மீது கடும் கொந்தளிப்பு உண்டாகியுள்ளது.

இதையடுத்து, பட்டிதார் சமூகத்தை சேர்ந்த தலைவர் அல்பேஷ் கதீரியா பேசுகையில், “தாக்கரேவால் குஜராத் பெருந்தலைவர்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மராத்தி மனப்பான்மையை கொண்டவராக தாக்கரே பேசியிருக்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“குஜராத் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவமானமக அமைந்துவிட்டது தாக்கரேவின் பேச்சு. ஆகவே, அவர் பொது மன்னிப்பு கேட்டாக வேண்டும்” என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“இந்தியாவின் பெருமையாக திகழும் இரு பெரும் தலைவர்களை தாக்கரே அவமதித்து பேசும்போது, மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக அரசு அமைதி காப்பது ஏன்?” என்று ஆம் ஆத்மி கேள்வியெழுப்பியுள்ளது. தாகரே விவகாரம் குஜராத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இதையும் படிக்க:1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

Raj Thackeray's controversial remarks against Sardar Vallabhbhai Patel and former Prime Minister Morarji Desai have sparked a political storm in Gujarat. 

கொல்கத்தா ஐஐஎம் கல்வி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன்!

கொல்கத்தா: கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவன வளாகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு இன்று(ஜூலை 19) ஜாமீன் வழங்கப்பட... மேலும் பார்க்க

மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.ப... மேலும் பார்க்க

ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை! இந்தியாவில் எங்கு அமைய உள்ளது?

ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேய... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தமாகாளி படகுப் பாதையில் இருந... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.அகமதாபாத்தில் கடந்த ஜூ... மேலும் பார்க்க

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கி... மேலும் பார்க்க