செய்திகள் :

பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!

post image

அரசுத் துறைகளில் அதிகளவிலான பணியாளர்களை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப், அரசின் செலவீனங்களை குறைக்க பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். முக்கியமாக அரசுத் துறைகளில் தேவையற்ற பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

அதிபராக பதவியேற்றதுடன் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் கட்டாய ராஜிநாமா செய்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் வாய்ப்பு அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறையிலும் தேவையற்ற பணியாளர்களை கண்டறிந்து பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றது.

இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில், இரண்டாம் முறையாக அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற துறைத் தலைவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதிக்குள் அதிகளவிலான பணியாளர்களை குறைப்பதற்கான திட்டத்தை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

அரசுத் துறைகளில் வேலை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களை கண்டறிந்து உடனடியாக பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த நிதியாண்டில் அரசின் செலவீனங்களில் ஒரு டிரில்லியன் டாலர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க் தெரிவித்தார்.

இதனிடையே, நிதிநிலை அறிக்கையில் சுகாதாரம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று டிரம்ப் உறுதி தெரிவித்துள்ளார்.

அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து அமெரிக்க அரசுத் துறைகளில் ஒரு லட்சம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

வடகொரியா நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.கரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத்... மேலும் பார்க்க

எம்ஹெச்370 விமானம்: மீண்டும் தொடங்கிய தேடுதல் வேட்டை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தேடும் பணிகள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க

4 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்று ஒப்படைப்பு: ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். இது ... மேலும் பார்க்க

இலங்கை: போதைப்பொருள் கடத்தியதாக இந்தியப் பெண் கைது

இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக இந்தியாவைச் சோ்ந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 1.2 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா்

தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தாா். எனினும... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன.பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத... மேலும் பார்க்க