செய்திகள் :

பரமக்குடி: காரில் வந்து ஆடு திருட்டு; ஓட்டம் பிடித்த தம்பதியை விரட்டி பிடித்த போலீஸார்!

post image

பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சரசு. இவர் நேற்று முன் தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பகுளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அன்று மதியம் ஆடுகளை எண்ணிய போது மேய்ச்சலுக்கு விட்டிருந்த 5 ஆட்டு குட்டிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் ஆடுகள் காணாமல் போனது குறித்து சரசு புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீஸார் ஆடு திருட்டு குறித்து விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையின் போது, ஆடுகளுடன் ஒரு கார் மானாமதுரை நோக்கி செல்வதாக போலீஸாருக்கு தெரியவந்தது.

ஆடு திருட பயன்படுத்திய கார்
ஆடு திருடிய காளீஸ்வரன் - முத்துமாரி

இது குறித்து மானாமதுரை போலீஸாருக்கு எமனேஸ்வரம் போலீஸார் தகவல் கொடுத்தனர். உடனடியாக மானாமதுரை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவர் சிலை அருகே வந்த கார் ஒன்றில் இருந்து இறங்கிய இருவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை கண்ட போலீஸார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி அய்யனார் நகரை சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அவரது மனைவி முத்துமாரி என்றும், காரில் வந்து ஆடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருட்டு போன ஆடுகளை மீட்ட போலீஸார், ஆடு திருட பயன்படுத்திய கார் மற்றும் காளீஸ்வரன் தம்பதியிரை எமனேஸ்வரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆடு திருட்டில் ஈடுபட்ட இந்த தம்பதியினர் மீது ஏற்கனவே சில ஆடு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கணவனும் மனைவியும் சேர்ந்து காரில் வந்து ஆடு திருடிய சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?

கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை... மேலும் பார்க்க

`இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதியான போலீஸ் ஜீப் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் இன்சூரன்ஸ், எப்.சி காலாவதியான நிலையில் ஓட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?

சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடி... மேலும் பார்க்க

``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு

மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு... மேலும் பார்க்க

ஆவின்: கெட்டுப்போன வெண்ணெய் கொள்முதல்; கோடிக்கணக்கில் இழப்பு - வலுக்கும் சிபிசிஐடி விசாரணை கோரிக்கை

`மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய், ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்... மேலும் பார்க்க

பட்டியலின பெண்கள் மீதான வன்கொடுமை; 90 வழக்குகளில் 3ல் தான் தண்டனை - அதிர்ச்சி தரும் எவிடென்ஸ் ஆய்வு

"தமிழ்நாட்டில் 7,500 க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் விசாரனையில் உள்ளது. இவற்றில் 10 சதவிகிதம் மதுரை மாவட்டத்தில் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது" என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள மதுரை 'எவிடென்ஸ... மேலும் பார்க்க