பரமத்தி வேலூரில் ரூ. 2.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5, 365 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ. 55.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 35.29-க்கும், சராசரியாக ரூ. 52.52-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்து 940 -க்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5, 158 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 53.53-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 36.71- க்கும், சராசரியாக ரூ. 51.51-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 39-க்கும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.