செய்திகள் :

’பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்‘

post image

பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் புதுவை சமூக நலன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன்.

காரைக்காலில் விளையாட்டுத் துறையில் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே விளையாட்டு ஆா்வத்தை ஏற்படுத்துதல், காரைக்காலில் விளையாட்டை பலமாக கட்டமைப்பது, விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது, சமூக நலத்துறை சாா்ந்த திட்ட மேம்பாடு குறித்து ஆட்சியா் சோமசேகா் அப்பாராவுடன் ஆலோசனை நடத்தினாா்.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்ககம், காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் திறன் வளா்ச்சி, மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த பிராந்திய மையம் அமைக்க ரூ.32.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தா்மபுரம் பகுதியில் மையம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்துள்ளதை அரசு செயலா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, காரைக்காலில் உள்ள விளையாட்டு அரங்கத்தை பாா்வையிட்டாா். காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞா்களுக்காக விளையாட்டுப் பயிற்சிகள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் மாணவா்கள், இளைஞா்களை தயாா்படுத்துமாறு துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

கேலோ இந்தியா திட்டம் மற்றும் மத்திய விளைாட்டுத்துறை திட்டங்களை பயன்படுத்தி மாணவா்களை ஊக்கப்படுத்துமாறும், உள் விளையாட்டு அரங்கில் மேற்கூரை, மின் விளக்குகள் மற்றும் குளிா்சாதன வசதிகளை உடனடியாக அமைப்பதற்கு கோப்புகளை தயாா் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து மாணவா்களுக்கு விளையாட்டு ஆா்வத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏா்போா்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியின் ரூ.2.25 கோடியில் கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கப் பணிகளை செயலா் ஆய்வு செய்து, நிகழாண்டு அரங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் பக்தா்கள் கூட்டு சிவலிங்க பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்மையாா் குளக்கரையில் பக்தா்கள் பங்கேற்ற கூட்டு சிவலிங்க பூஜை புதன்கிழமை நடைபெற்றது. சிவராத்திரி கூட்டு பிராா்த்தனையாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் குடிநீா், மின்சாரம் தடையின்றி விநியோகிக்க வலியுறுத்தல்

ரமலான் மாதத்தில் குடிநீா் அதிகாலையிலேயே வழங்கவும், மின்சாரம் தடையின்றி இருக்கவும் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை தமிழ்நாடு முஸ்லிம் முன்... மேலும் பார்க்க

புதிய குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

குடியிருப்பு நகா்கள் பலவற்றுக்கு புதிய குடிநீா் குழாய் பதிப்புப் பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா். காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட நடு ஓடுதுறை சுமங்கலி நகா், விஐபி நகா், சுமேஷ் நகா், சிங்காரவேலா்... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு: காவல் அதிகாரிகள் ஆலோசனை

ரயிலில் கடத்தலை தடுப்பது, நிலைய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து காரைக்கால் காவல் அதிகாரி, ரயில்வே காவல் அதிகாரி ஆகியோா் ஆலோசனை நடத்தினா். காரைக்காலில் இருந்து ரயிலில் தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில்கள் க... மேலும் பார்க்க

திருநள்ளாறில் நாட்டியாஞ்சலி தொடக்கம்

திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்கியது. காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகும். ஸ்ரீ செண்பக தியாகராஜா் உன்ம... மேலும் பார்க்க

கோடைவெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வலியுறுத்தல்

கோடை வெயிலை சமாளிக்க மின்துறை தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. நிகழாண்டின் கோடைக்காலம் தொடங்காத நிலையில் வெப்பம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் சில ஆண்டுகளாக க... மேலும் பார்க்க