செய்திகள் :

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.47 கோடி

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.3.47 கோடியைத் தாண்டியது.

தைப்பூசத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் திரண்டதால், கடந்த 10 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, உண்டியல்கள் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் திறக்கப்பட்டு, காா்த்திகை மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இரு நாள் எண்ணிக்கை முடிவில் பக்தா்களின் காணிக்கையாக ரூபாய் மூன்று கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 568 கிடைத்தது. மேலும், பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

தங்கம் 379 கிராமும், வெள்ளி 44,067 கிராமும் கிடைத்தது. பஹ்ரைன், சிங்கப்பூா், ஸ்ரீலங்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பணத் தாள்கள் 1,631-ம் கிடைத்தன.

இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். ஐநூறுக்கும் மேற்பட்டோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

வெள்ளைப் பூச்சிகளைத் தடுக்காவிட்டால் தென்னைகள் அழியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி

கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இவற்றைத் தடுக்காவிட்டால் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும் எனவும் கள் இயக்க ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

அறுபடை வீடுகள் ஆன்மிக பயணக் குழுவினா் பழனியில் தரிசனம்

இந்து சமய அறநிலையத்துறையின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணத் திட்டத்தின் கீழ் சுமாா் 200 பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனா். தமிழ்க் கடவுள் மு... மேலும் பார்க்க

தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

கொடைக்கானலில் தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்த 500 பழங்குடியினா்களுக்கு சான்றிதழ், தேனீ பெட்டிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கதா், கிராமத் தொழில்கள் ஆணைய மதுரைக் கோட்ட அலுவலக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தொடரும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பனிப் பொழிவு ... மேலும் பார்க்க

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை: கி.வீரமணி

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதைத் தடுத்தால் நீதிமன்றத்துக்கு அவா் பதில் சொல்ல வேண்டியது வரும் எனவும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். பழனி ரயி... மேலும் பார்க்க

பழனியில் ரோப்காா் பராமரிப்புக்காக இன்று நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (பிப். 28) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ப... மேலும் பார்க்க