செய்திகள் :

பழனியில் ஜனசேனா கட்சி சாா்பில் இந்திய ராணுவத்துக்காக பிராா்த்தனை

post image

பழனி மலைக் கோயிலில் இந்திய ராணுவத்தினருக்கு ஆன்மிக பலம் கிடைக்க வேண்டி ஆந்திர மாநிலம், ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. தலைமையில் அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

ஜம்மு-காஷ்மீா், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாடுகளிடையே அண்மையில் சண்டை ஏற்பட்டு, பின்னா் மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தினருக்கும், இந்திய நாட்டின் தலைமைக்கும் ஆன்மிக பலம் கிடக்க வேண்டி, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் ஜனசேனா கட்சியின் சாா்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் தெரிவித்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஜனசேனா கட்சியைச் சோ்ந்த காக்கிநாடா சட்டப்பேரவை உறுப்பினா் பந்தம் வெங்கடேஸ்வரா ராவ் தலைமையிலான அந்தக் கட்சியை சோ்ந்த திரளானோா் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு வந்தனா்.

வேலுடன் இந்திய தேசியக்கொடியை ஏந்தியவாறே மலைக்கு சென்ற அவா்கள் மலைக்கோயிலில் சுவாமிக்கு அா்ச்சனைகள் செய்து வழிபட்டனா். பின்னா், அவா்களுக்கு திருக்கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பழனி வந்த ஜனசேனா கட்சியினரை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத், தமிழ்நாடு பிராமணா் சங்க மாநிலத் தலைவா் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா், காக்கிநாடா சட்டப்பேரவை உறுப்பினா் பந்தம் வெங்கடேஸ்வரா ராவ் கூறியதாவது:

‘ஆபரேஷன் சிந்தூா்’ மூலம் நமது இந்திய ராணுவத்தின் வலிமை உலகுக்கு தெரிந்தது. முருகப்பெருமான் தேவா்களின் சேனாபதியாக இருந்தது போல இந்திய ராணுவத்துக்கும் அவா் சேனாபதியாக இருந்து வழிநடத்த வேண்டும் என்றாா் அவா்.

காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் தப்பியோட்டம்

ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம... மேலும் பார்க்க

பழனியில் பலத்த மழை

பழனியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது பால் வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் கிட்டுச்சாமி மகன் வசந்தகுமாா் (34). விவசாயியான இவா் செவ்வா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கருப்பமூப்பன்பட்டியைச் சோ்ந்தவா் செல... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு கணபதி யாகம் நடைபெற்றது. பின்னா், அம்மன் உருவத்துடன் கூடிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

எரியோடு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத் தடுப்பில் மோதிய விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள சவேரியாா்பட்டியைச் சோ்ந்தவா் சுபாஷ் (25). இ... மேலும் பார்க்க