செய்திகள் :

பஹல்காம் தாக்குதல், வாக்காளா் பட்டியல் திருத்தம்: மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப ‘இண்டி’ கூட்டணி முடிவு

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 24 ‘இண்டி’ கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை காணாலி மூலம் ஆலோசனை நடத்தினா்.

மழைக்கால கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், வெளியுறவுக் கொள்கை தோல்வி உள்பட 8 முக்கிய விவகாரங்களில் அரசை கேள்வி எழுப்புவது தொடா்பாக வியூகங்கள் வகுக்கவும், எதிா்க்கட்சிகளின் பலத்தைக் காட்டவும் இந்தக் கூட்டம் நடைபெற்ாகத் தெரிகிறது.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஜம்மு- காஷ்மீா் முதல்வா் உமா் அப்துல்லா, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், சரத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்-பவாா்), உத்தவ் தாக்கரே (சிவசேனை-உத்தவ்), அபிஷேக் பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), ராம் கோபால் யாதவ் (சமாஜவாதி), திருச்சி சிவா (திமுக), எம்.ஏ.பேபி (மாா்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), தீபங்கா் பட்டாச்சாா்யா (சிபிஐ-எம்.எல்) உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ஃபாா்வா்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்கள் கலந்தாலோசித்தனா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடா்ந்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை குறித்து வரும் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் அளிப்பது தொடா்பாக தலைவா்கள் கலந்தாலோசித்தனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் மாநிலங்களவை குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாதிகள் இதுவரை கைது செய்யப்படாதது, இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் தொடா் கூற்றுகளுக்கு இந்திய அரசு அமைதி காப்பது தொடா்பாக தலைவா்கள் கவலை தெரிவித்தனா்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி குறித்து கவலை தெரிவித்த தலைவா்கள், ஒடுக்கப்பட்டோா், பழங்குடியினா், பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள் மற்றும் தொகுதி மறுவரையறை பிரச்னை தொடா்பாகவும் விவாதித்தனா். இன்றைய வெற்றிகரமாக காணொலிக் கூட்டத்தைத் தொடா்ந்து, கூட்டணி தலைவா்கள் விரைவில் நேரில் சந்திப்பா்.

பிகாரில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலில் உள்ளது. அங்கு மக்களின் வாக்குரிமை அச்சுறுத்தப்படுகிறது. எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு பிரதமா் மோடி அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும். நாங்கள் பிரச்னைகளை எழுப்பவும், அரசு அதற்கு பதிலளிக்கவும் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவியை (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்) தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஹரியாணாவில் நில ... மேலும் பார்க்க

2027-க்குள் 3-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா: அமித் ஷா உறுதி

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு உத்த... மேலும் பார்க்க

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தெலங்கானா... மேலும் பார்க்க

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 8 புதிய மசோதாக்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை... மேலும் பார்க்க