செய்திகள் :

பாகிஸ்தானில் தொடா் மழை: உயிரிழப்பு 200-ஐ கடந்தது

post image

பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டு பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்தே பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாட்டின் கிழக்கு, வடமேற்குப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அங்குள்ள பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீா் உள்ளிட்ட பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது, வீடு இடிந்து விழுவது, மின்னல் தாக்குவது என மழையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 203 போ் உயிரிழந்துவிட்டனா். 454 போ் காயமடைந்துள்ளனா். அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 123 உயிரிழப்புகளும், கைபா் பக்துன்கவாவில் 41 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பலூசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலா 16 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

200-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிந்து, தெற்கு பஞ்சாப், ஆக்கிரமிப்பு காஷ்மீா், வடகிழக்கு பலூசிஸ்தான், தலைநகா் இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்த சில நாள்களுக்கு காற்றுடன் கூடிய அதிபலத்த மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. எனவே, மழையால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இலக்குகளை எட்டினால் உக்ரைனுடன் பேச்சு: ரஷியா

‘உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது; ஆனால், எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

போா் நிறுத்த பேச்சு முடக்கம்: மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

போா் நிறுத்த பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. பாலஸ்தீனத்தின் காஸா ம... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவு

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக அங்குள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. 5 நிலநடுக்கங்களில் ... மேலும் பார்க்க

காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த 72 பேர் சுட்டுக் கொலை!

காஸாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமான உதவிகள் பெறக் காத்திருந்த 72 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது.இதில் 150க்கும் அதிகமானோர் பட... மேலும் பார்க்க

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இ... மேலும் பார்க்க

பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை

ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடு... மேலும் பார்க்க