செய்திகள் :

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து!

post image

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.

லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆரம்பித்தது. ஆகஸ்ட் 2-இல் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.

யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய மூத்த வீரர்களின் ’இந்தியா சாம்பியன்ஸ்’ அணியில்:

  • ஷிகர் தவான்

  • ஹர்பஜன் சிங்

  • சுரேஷ் ரெய்னா

  • இர்ஃபான் பதான்

  • யூசுஃப் பதான்

  • ராபின் உத்தப்பா

  • அம்பத்தி ராயுடு

  • பியூஷ் சாவ்லா

  • ஸ்டூவார்ட் பிண்னி

  • வருண் ஆரோன்

  • வினய் குமார்

  • அபிமன்யு மிதுன்

  • சித்தார்த் கௌல்

  • குர்க்க்ரீத் மான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தநிலையில், லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) பர்மிங்ஹாமில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் விலகினர்.

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி இந்திய மூத்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்தாகியுள்ளது.

WCL has canceled the India-Pakistan match; Indian players like Shikhar Dhawan confirmed their withdrawal due to geopolitical concerns. 

2-வது ஒருநாள்: இங்கிலாந்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநா... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் இதுவே என்னுடைய பெருமைமிகு தருணம்; மனம் திறந்த ஆண்ட்ரே ரஸல்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய பெருமைமிகு தருணத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் பகிர்ந்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரஸல், சர்வதேச டி20 கிரிக்கெட... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவதற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் ஜோ ரூட்!

இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணித்து வருகிறார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க