செய்திகள் :

பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' - விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்

post image

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 - எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது.

43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம் கிலோ எடை வரை ஏந்திச் செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதை ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படுகிறது.

இதற்கு முன்னர், எடை மிகுந்த செயற்கைக்கோள்களை ஃப்ரென்ச் கயானா நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து வேறு நாட்டு ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

இஸ்ரோ - CMS-03, LVM3-M5
இஸ்ரோ - CMS-03, LVM3-M5

ஆனால் இப்போது, எடைமிகுந்த செயற்கைக்கோளையும் தங்களால் ஏவ முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கும் வகையில், 4,400 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து இவ்வளவு எடைகொண்ட செயற்கைகோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை. 1,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், இந்திய கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

அதன் மூலம், இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும் உதவும்.

அதற்கு ஏற்ப, இந்த செயற்கைக்கோள் விண்ணில் குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவிலும் புவி வட்டப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறியதாவது:
“4,410 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட், தகவல் தொடர்பு செயற்கைக்கோளை தேவையான சுற்றுப்பாதையில் துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் செலுத்தியுள்ளது.

CMS-03, LVM3-M5
CMS-03, LVM3-M5

மிகவும் மதிப்புமிக்க சந்திரயான்-3 தேசத்திற்கு பெருமை சேர்த்தது. இப்போது மற்றொரு பெருமையை இந்தியா அடைந்திருக்கிறது. 100 சதவீத வெற்றி விகிதத்தைக் காட்டுகிறது.

இந்த செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது “ஆத்மநிர்பர் பாரத்” (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) என்பதற்கான மற்றொரு பிரகாசமான எடுத்துக்காட்டு. வானிலை ஒத்துழைக்காததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடினமான சூழலை எதிர்கொண்டனர். ஆனாலும், அவர்களின் கடின உழைப்பு வெற்றியை உறுதி செய்துள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

மரணம் குறித்து முன்கூட்டியே உணர முடியுமா? - அறிவியல் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

மரணம் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று. இருப்பினும் சிலர் தங்களது இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அது குறித்து சுற்றுத்தார்களிடம் கூறுவார்கள். தங்களின் கடைசி ஆசை அல்லது எதிர்காலத்தில் இவ்வாற... மேலும் பார்க்க

Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்பு தெரியுமா?

இயற்பியல் துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகிய மூன்று அறிவியலாளர்கள் வென்றுள்ளனர். மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயக்கவியல் குறித்த ஆய்வுக்... மேலும் பார்க்க

Planet Y: பூமிக்கும் புதனுக்கும் இடைப்பட்ட வெளியில் புது கிரகமா?- வானியலாளர்கள் வெளியிட்ட தகவல்!

சூரிய மண்டலத்தின் தொலைதூரப் பகுதியில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மமான கிரகத்திற்கு 'பிளானட் Y' (Planet Y) என்ற... மேலும் பார்க்க

'இரும்பை உருக்கும் மந்திரக் கல்' - வைரலாகும் போலி வீடியோ - பின்னிருக்கும் அறிவியல் உண்மை என்ன?

ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அரிய கருப்பு நிறக் கல் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கல் கையில் தொடும்போது சாதாரணமாக குளுமையாக இருந்தாலும் அதில் இரும்பு, எஃகு பொருட்களை... மேலும் பார்க்க

"5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் அடுப்பு எரியுமா?" - Prof T.V.Venkateswaran Interview

தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவதன் பின்னணியில் இருக... மேலும் பார்க்க