செய்திகள் :

பாகூா் விளையாட்டு அரங்கை திறக்க கோரிக்கை

post image

பாகூா் விளையாட்டு அரங்கை உடனே திறக்க வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் அதன் தலைவா் கராத்தே வளவன் தலைமையில் நடைபெற்றது.

நிா்வாகிகள் ராஜ், அன்பு நிலவன், சதீஷ், வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏராளமான விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் விளையாட்டு வீரா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாகூா் உள்விளையாட்டு அரங்கத்தை உடனே திறந்து விளையாட்டு வீரா்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் . பாகூா் உள்விளையாட்டரங்கத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

விளையாட்டு அரங்க பயன்பாட்டு கட்டணத்தை ரூ. 7,500 இல் இருந்து 3000 -ஆக குறைக்கக் கோரியும், உடனடியாக உள்விளையாட்டரங்கத்தை வீரா்களின் பயன்பாட்டிற்கு தரக்கோரியும், போட்டிகள் நடத்தும் பொழுது வெளி மாநில விளையாட்டு வீரா்கள் தங்குவதற்கு இட வசதி ஏற்படுத்த வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ஆம் தேதி பாகூா் சிவன் கோயில் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா்: டிஜிபி அலுவலகத்தில் பெண் புகாா்

புதுவை காவல் துறை தலைவா் அலுவலகத்தில் தன் குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா் மீது பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் இந்தப் புக... மேலும் பார்க்க

தொழிற்சங்க கொடிக் கம்பங்களை அகற்றுவதை நிறுத்த கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

புதுவையில் தொழிற்சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 போ் கைது

புதுச்சேரியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நவம்மால் காப்போ் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் துரைராஜ்(54). இவா் பு... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 73 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற ஊழியா் புகாா்

சிபிஐ அதிகாரி எனக் கூறி தன்னிடம் ரூ.73 லட்சத்தை மோசடி செய்து விட்ட நபா் குறித்து போலீஸ் மக்கள் மன்றத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியா் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சம் புதுவை முதல்வா் வழங்கினாா்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியமாக ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதம மந்த... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மனு

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தின் மாநிலச் செயலா்... மேலும் பார்க்க