செய்திகள் :

"பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!" - சாடும் உதயநிதி ஸ்டாலின்

post image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தது காங்கிரஸ் கட்சி.

இதனைத் தொடர்ந்து திமுகவினர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.

திமுக - காங்கிரஸ்
திமுக - காங்கிரஸ்

"வெறும் 17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் நாம் இன்று வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இப்போது ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்குத் மெஜாரிட்டி கிடைக்காமல், நம்முடைய கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளின் ஆதரவால்தான் இன்று இந்த ஆட்சி அமைந்திருக்கிறது.

நம்முடைய கூட்டணியில் இருந்த சில கட்சிகள் நம் தலைவரிடம் வந்து, தலைவரின் உத்தரவைப் பெற்று, அனுமதியைப் பெற்று ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய முதுகின் மேல் ஏறி நின்று நம் மேல் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி, இன்று நம்முடைய முதுகில் குத்திவிட்டுப் போயிருக்கிறது; இதை யாரும் மறந்துவிடாதீர்கள்.

இந்தியாவில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு நான்கூட நரேந்திர மோடியும் அமித் ஷாவும்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்குக் காரணம், முதன்மைக் காரணம் அவர்கள் கிடையாது.

காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்பது இப்போது புரிகிறது. அப்படிப்பட்ட அந்தக் காங்கிரஸையும் நம்முடைய தலைவர்தான் தோளில் சுமந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் சுமந்துகொண்டிருந்தார்.

உதயநிதி
உதயநிதி

மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும், பாஜகவைத் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று நம்முடைய தொண்டர்களும் நாமும் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துக்கொண்டிருந்தோம்.

குறைந்தபட்ச ஒரு நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக் கூடாது. எந்தக் காலத்திலும் நாம் அருகில் சேர்க்கக் கூடாது." எனக் கூறியிருக்கிறார்.

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்த விலை! - விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதி!

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் 'குழந்தைத் திருமணம்' - அப்போ, ஹெல்ப் லைன், கடுமையான சட்டங்களின் பயன்?

இந்தியாவில் பெண் 18 வயதிற்கு உட்பட்டவராகவும், ஆண் 21 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குத் திருமணம் நடந்தால், அது 'குழந்தைத் திருமணம்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தைத் திருமணங்கள... மேலும் பார்க்க

MK Stalin: "கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்" - ஸ்டாலின் வேண்டுகோள்

தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்றைய தினம் 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். தவெக ஆட்சியமைத்ததற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சரவையில... மேலும் பார்க்க

3-வது ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு: "பயோகேஸ் நோக்கி இந்தியா நகர வேண்டும்" - பிரதமர் அறிவுறுத்தல்

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது ஆண்டு ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான மத்திய அமைச... மேலும் பார்க்க

கோவையில் டாஸ்மாக் மூடலால் கல்லா கட்டும் FL 2 பார்! - சட்ட சிக்கலை தவிர்க்க நூதன முயற்சி? | Exclusive

த.வெ.க. அரசு பொறுப்பேற்ற உடன் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் மூ... மேலும் பார்க்க

TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த தமிழன் பார்த்திபன்?

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில்... மேலும் பார்க்க