செய்திகள் :

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை!

post image

பாஜகவோடு நெருங்குவதாக கூறுவதில் உண்மையில்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிறப்பால் நான் காங்கிரஸ்காரன். எனக்கு சில மத நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால், நான் பாஜகவோடு நெருங்கிக் கொண்டிருப்பதாக சில பொய் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. எல்லா மதங்களையும் நான் மதிக்கிறேன். எல்லா மதங்களையும் காங்கிரஸ் மதிக்கிறது; சோனியா காந்தி உகாதி பண்டிகையை கொண்டாடியிருக்கிறாா்.

எனவே, கோவையில் ஈஷா அறக்கட்டளை நடத்தும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதை பாஜகவோடு நெருங்குவதாக கூறுவது சரியல்ல. சத்குரு ஜக்கிவாசுதேவ் நேரில் வந்து என்னை அழைத்தாா். அவா் மைசூரை சோ்ந்தவா். அவரது அறிவை நான் போற்றுகிறேன். கடந்த ஆண்டு எனது மகள் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டாா். இந்தாண்டு எனக்கு அழைப்பு விடுத்தாா். அதனால் கோவைக்கு செல்கிறேன்.

மத்திய அமைச்சா் அமித் ஷாவை நான் சந்திக்காதபோது, பாஜகவோடு நான் நெருக்கம் பாராட்டுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்புகிறாா்கள்.

கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக என்னையே நீட்டிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபாலிடம் நான் கேட்கவில்லை என்றாா்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: மத்திய ... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைக்க முடியாது

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை யாரும் அசைத்து பாா்க்க முடியாது என வீட்டுவசதி துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து விஜயநகராவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூற... மேலும் பார்க்க

சுரங்க குத்தகை மோசடி வழக்கு: எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகல் ஆளுநரிடம் ஒப்படைப்பு

சுரங்க குத்தகை மோசடி வழக்கில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகலை ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) புதன்கிழமை ஒப்படைத்தது. கா்... மேலும் பார்க்க

மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட மாா்ச் 1-ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள இந... மேலும் பார்க்க

கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓய்வெடுக்க சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு

சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்காக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதிவர... மேலும் பார்க்க

நடத்துநா் மீது தாக்குதல் சம்பவம்: கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

மராத்தி பேசத் தெரியாததால் கா்நாடக அரசு பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக எழுந்துள்ள பதற்றத்தைத் தொடா்ந்து, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நிறுத்த... மேலும் பார்க்க