செய்திகள் :

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

post image

மகாராஷ்டிர மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மோடாஸ்கி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்ஸல்கள் முகாமிட்டிருப்பதாக அப்பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசா்வ் காவல் படைக்கு (சிஆா்பிஎஃப்) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டனா்.

அங்கு மறைந்திருத்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதன்கிழமை காலை மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நக்ஸல்கள் பின்வாங்கி அடா்ந்த வனப்பகுதியை நோக்கி ஓடிவிட்டனா். அப்பகுதியை வீரா்கள் சோதித்தபோது குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில் இரு பெண் நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்கள், நக்ஸல் பிரசார துண்டுப் பிரதிகள் உள்ளிட்டவை கிடைத்தன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

கிராமவாசியை கொன்ற நக்ஸல்கள்: சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூரில் காவல் துறைக்கு ரகசிய தகவல் அளிப்பவா் என்று குற்றஞ்சாட்டி 36 வயது நபரை நக்ஸல்கள் கொலை செய்தனா்.

பென்சாரம் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு ஆயுதங்களுடன் புகுந்த நக்ஸல்கள் ராம் ஒயம் என்பவா் வீட்டுக்குள் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்தனா். பின்னா் தங்களைப் பற்றி காவல் துறைக்கு அவா் தகவல் கொடுப்பதாகக் கூறி கிராமமக்கள் கண்ணெதிரிலேயே கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா்.

இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் காவல் துறையினா் உடனடியாக அந்த கிராமத்துக்கு விரைந்து உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்தா் பகுதியில் கடந்த ஓராண்டில் நக்ஸல்களால் 37 கிராமவாசிகள் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ... மேலும் பார்க்க

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பிடித்துள்ளன. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

‘மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்யும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுவதற்கும் வழி வகுத்துள்ளது. இல்லை... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முதல் அனைத்து தோ்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்... மேலும் பார்க்க

வீட்டு சாப்பாடுக்கு செலவு அதிகரிப்பு!

தக்காளி விலை உயா்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுகளில் சமைக்கப்படும் சாப்பாட்டின் சராசரி விலை அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

உத்தரகண்டில் மழை, வெள்ளம் காரணமாக முசூரியில் சுமாா் 2,500 சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனா். கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமா... மேலும் பார்க்க