செய்திகள் :

பாமக: "அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன்" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

post image

சென்னை மகாபலிபுரத்தில் பாமக பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று( டிச.9) அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றிருக்கிறது.

அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், " இதுவும் கடந்துபோகும் என்று நானும் எவ்வளவோ விஷயங்களைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேன்.

அவமானங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மன உளைச்சலில் இருக்கிறேன். தூக்கத்தை தொலைத்திருக்கிறேன்.

இதெல்லாம் பாமக கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் தான்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அமைதியாக நானும் நம் வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்தாலும் கூட சில துரோகிகள் விடமாட்டேன் என்கிறார்கள்.

இந்த துரோகிகளை நான் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. என்ன நடக்குமோ அது கண்டிப்பாக நடக்கும்.

இந்த மூன்று மாதங்களில் யாரெல்லாம் ஜெயிலுக்கு போகப்போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறீர்கள். நான் சும்மா விடப்போவதில்லை.

தைலாபுரத்தை இன்று திமுக ஆக்கிரமித்துவிட்டது. இதுதான் உண்மை நிலவரம்.

ஐயாவிடம் (ராமதாஸ்) சென்று அந்த துரோகிகள் தினமும் பொய் சொல்கிறார்கள்.

ராமதாஸ்
ராமதாஸ்

அவருக்கு 87 வயதாகிவிட்டது. முதுமை வந்துவிட்டது. அவர் குழந்தை மாதிரி ஆகிவிட்டார். சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை.

அவர்கள் சொல்லும் பொய்யை தான் ஐயா நம்பிக்கொண்டிருக்கிறார்" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

வந்தே மாதரம் : `எந்த விவாதங்களுக்கும் நாங்கள் யாரும் பயப்படுவதில்லை' - கொந்தளித்த அமித் ஷா

இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது.பிரதமர் மோடி, மக்களவையி... மேலும் பார்க்க

``SIR-ஐ நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ உரிமையே இல்லை" - மக்களவையில் காங்கிரஸ் கடும் வாதம்

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்ட தேர்தல் ஆணையம் (EC), அதன் தொடர்ச்சியாக அடுத்தாண்டு சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க

TVK: `இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமா புதுச்சேரி?’- விஜய் குற்றச்சாட்டு உண்மையா?

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அப்போது, `இந்தியாவில் ரேஷன... மேலும் பார்க்க

இஷா சிங்: 'மும்பை பின்னணி, மனித உரிமை ஆர்வலர்' புதுவையில் ஆனந்திடம் கறார் காட்டிய பெண் காவலர் யார்?

கட்சி ஆரம்பித்த பிறகு புதுச்சேரியில் முதல் முதலாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நி... மேலும் பார்க்க

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அத... மேலும் பார்க்க

``புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கத்துக்கணும்" - த.வெ.க தலைவர் விஜய் தாக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார்.புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொத... மேலும் பார்க்க