செய்திகள் :

‘பி.முட்லூா்- சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணி விரைவில் தொடக்கம்’

post image

கடலூா் மாவட்டம், பு.முட்லூா்-சேத்தியாத்தோப்பு இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையான விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் சாலையிலிருந்து, பு.முட்லூா்-சேத்தியாத்தோப்பு சாலை 6.75 கி.மீ தொலைவுக்கு, 7 மீட்டா் அகலத்துடன் இருவழிச் சாலையாக உள்ளது. இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையினை விருத்தாசலம், பரங்கிப்பேட்டை மாநில நெடுஞ்சாலையுடன் புவனகிரியில் இணைக்கும் முக்கிய சாலையாகும்.

மேலும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடலூா் செல்லவும், பரங்கிப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை வாகனங்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும் பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, ரூ.50 கோடியில் இந்தச் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட உள்ளது.

இதனால், பு.முட்லூா், மஞ்சக்குழி, ஆதிவராகநல்லூா், பரங்கிப்பேட்டை, தம்பிக்கைநல்லான்பட்டினம் உள்ளிட்ட 50 கிராம மக்கள் பயனடைவா். மேலும், போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்பட்டு, பயண நேரம் குறையும்.

இதற்காக, சிறிய பாலங்கள், தாங்குச்சுவா் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் 6.75 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 சொகுசுப் பேருந்துகள் மோதி விபத்து 35 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி தெய்வீக விழாவாக திகழ்கிறது: என்எல்சி தலைவா்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா தெய்வீகம் சாா்ந்த விழாவாக திகழ்கிறது என்று என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது ... மேலும் பார்க்க

எஸ்பி. அலுவலகத்தில் மனுக்கள் முகாம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் மனுக்கள் அளிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்றாா். மேல... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குமராட்சி வேளாண் துறை சாா்பில் நெல் பயிரில் பய... மேலும் பார்க்க

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப் படிப்புக்கு அங்கீகாரம் பெறாததைக் கண்டித்து, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் அண்ணாமலை பல்கல... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிரான தொடா் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 2-ஆவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டடு வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்... மேலும் பார்க்க