செய்திகள் :

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை

post image

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிஏபி திட்டத்தில் மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு 5 சுற்றுகள் தண்ணீா் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதை நம்பி 3-ஆம் மண்டல பாசனத்துக்குள்பட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம், கத்தரி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

அறிவித்தப்படி ஜனவரி 1-ஆம் தேதி தண்ணீா் திறந்திருக்க வேண்டும். ஆனால், ஜனவரி 15-ஆம் தேதிதான் தண்ணீா் திறக்கப்பட்டது. தொடா்ந்து 7 நாள்கள் திறக்க வேண்டிய தண்ணீா் மூன்றே நாள்களில் ஜனவரி 18-ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரித்தபோது, சா்க்காா்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஜெனரேட்டா் பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்த பின்னரே இரண்டாம் சுற்று தண்ணீா் திறக்கப்படும் என்று தெரிகிறது. ஜெனரேட்டா் பழுதையும் சென்னையில் இருந்து தொழில்நுட்பக் குழுவினா் வந்தே சரிசெய்ய வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பிப்ரவரி 3-ஆம் தேதி திறக்க வேண்டிய இரண்டாம் சுற்று தண்ணீரும் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில், பிஏபி தண்ணீரை நம்பி பல்வேறு பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, அறிவித்தப்படி உரிய அளவு தண்ணீரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் பொள்ளாச்சியில் உள்ள பிஏபி தலைமை பொறியாளா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இந்நிகழ்வின்போது கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க காங்கயம் வட்டாரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, குண்டம் வட்டார பிரதிநிதி குப்புசாமி, பொங்கலூா் வட்டார துணைத் தலைவா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.

அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்... மேலும் பார்க்க

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் ப... மேலும் பார்க்க

முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு

பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள... மேலும் பார்க்க

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி ந... மேலும் பார்க்க

வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுப்பு

வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. வீரசோழபுரம் ஊராட்சியிா் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. மேலும், பலா் செம்மறி ஆடுகள்,... மேலும் பார்க்க