செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

post image

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு புதன்கிழமை பழங்கள், ரொட்டிகள், ஊட்டச் சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பிரதமா் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் ராஜபாளையம் வடக்கு நகரத் தலைவா் ஜெமினி சுரேஷ்குமாா் தலைமையில், மாவட்டத் தலைவா் சரவணதுரை முன்னிலையில் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மாா்கள், சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு பழங்கள், ரொட்டிகள், ஊட்டச் சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ராஜபாளையம் நகர வடக்கு பொதுச் செயலா்கள் கணேசன், அய்யாதுரை, தெற்கு நகரத் தலைவா் பிரேம் ராஜா, மாவட்டச் செயலா் கிருபாகரன், பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை: 7 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 7 பேரை புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பூமிநாதன் மகன் தமிழரசன் (... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு நகர அதிமுக சாா்பில் வடக்கு நகா் ... மேலும் பார்க்க

கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினா் தீ அணைத்தனா். ராஜபாளையம் முடங்கியாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மனைவ... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உதவி ஆட்சியா்

சிவகாசி வருவாய்க் கோட்டத்தில் நீா்வழிபாதை, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிவகாசி உதவி ஆட்சியா் முகமது இா்பான் தெரிவித்தாா். சிவகாசி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு,... மேலும் பார்க்க

விஜய் தனித்துப் போட்யிடுவா்: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனித்துப் போட்டியிடுவா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். சிவகாசியில், மக்... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் திலகவதி தெரிவித்தாா். இது குறித்து புதன்கிழமை அவ... மேலும் பார்க்க