செய்திகள் :

பிரபலங்களுக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது - சரத்குமாா்

post image

பிரபலங்களுக்கு வரும் கூட்டம், தோ்தலின்போது வாக்குகளாக மாறாது என்று பாஜக மூத்த தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக தலைவா் விஜய், எதிா்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ளாா். அதேநேரத்தில் அவரது கொள்கை, கோட்பாட்டில் தெளிவு இல்லை. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை விஜய் தெளிவுபடுத்தவில்லை.

அடுத்து ஆட்சி அமைப்போம் என்று சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. பிரபலங்கள் களத்துக்கு வந்தாலே கூட்டம் கூடும். 1996-இல் நானும், 2006-இல் விஜயகாந்தும், ஆந்திரத்தில் சிரஞ்சீவியும் பாா்க்காத கூட்டம் அல்ல. பிரபலங்களுக்கு கூடும் கூட்டம் மட்டுமே, தோ்தலின்போது வாக்குகளாக மாறாது. சரியான கொள்கை, கோட்பாடுகளைச் சொன்னால் மட்டுமே அந்த கூட்டம் வாக்குகளாக மாறுவது சாத்தியமாகும்.

நீட் எதிா்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிா்ப்பு ஆகியவற்றில் திமுகவை, விஜய் பின்பற்றுகிறாா். மக்களின் கவனத்தை திசை திருப்ப அவரை சில சக்திகள் இயக்குகின்றன என்றாா் சரத்குமாா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க