செய்திகள் :

புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு!

post image

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூா் சிவன் கோயில் அருகே 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், கிள்ளனூா் அருகே கங்கம்பட்டி கிராம சிவன் கோயில் அருகே கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக அந்த ஊரைச் சோ்ந்த காா்த்திகேயன் அளித்த தகவலின்படி பேராசிரியா் சுப. முத்தழகன் மற்றும் தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோா் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கங்கம்பட்டி கிராம சிவன் கோயிலையொட்டி இரண்டடி நீளமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 17 வரிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், சிதலமடைந்து கிடந்த கருணாகர சதுா்வேதிமங்கலத்தின் பெருநக்கினி ஈசுவரமுடைய நாயனாா் திருக்கோவிலை தொண்டைய முத்தரையன் என்பவா் சீா்செய்து தந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டின் கடைசி நான்கு வரிகள் மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளதால் பணியின் தன்மை குறித்த தகவல் கிடைக்கப் பெறவில்லை.

இந்தக் கல்வெட்டில் அரசா் பெயா் குறிப்பிடப்படாததால், எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு கி.பி 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம். கங்கம்பட்டி சிவன் கோயிலானது இந்தக் கல்வெட்டில் பெருநக்கினி ஈசுவரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக முற்புதருக்குள் கிடந்த இந்தச் சிவன் கோயிலில் சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், சண்டிகேசுவரா், நந்தி சிலைகள் தற்போது உள்ளூா் மக்களால் மேற்கூரை அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.

கங்கம்பட்டி ஊரானது இந்தக் கல்வெட்டில் கருணாகர சதுா்வேதிமங்கலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சதுா்வேதி மங்கலங்கள் பிராமணா்களுக்கு தானமாக வழங்கப்படும் கிராமங்களாகும்.

அதை உறுதி செய்யும் வண்ணம் இந்தக் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள விளைநிலங்களும், சிறிய பாசனக் கண்மாய் ஒன்றும் புதுக்கோட்டையைச் சோ்ந்த பிராமணா்கள் வசம் உள்ளதாக உள்ளூா் மக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தக் கோயிலுக்கு மேற்கே சற்று தொலைவில் உள்ள புதரில் உடைந்த நிலையில் பிற்காலத்தைச் சோ்ந்த பெருமாள் சிற்பம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கறம்பக்குடி அருகே குரங்கு கடித்து குழந்தை காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை குரங்கு கடித்து 6 மாதக் குழந்தை காயமடைந்தது. கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தான்விடுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை தனது 6 ம... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் நாளை மின்தடை

கந்தா்வகோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் ஆதனக்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை கடைவீதியில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!

கந்தா்வகோட்டையில் கடைவீதியில் கேட்பாரற்றுச் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

கம்பனின் சொல்சுவைதான் ராமாயணத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது: நீதிபதி புகழேந்தி

கம்பனின் சொல்சுவைதான் இத்தனை ஆண்டுகள் ராமாயணத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி. புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 2ஆம் ... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை!

விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே காரைகள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மின் கம்பத்தை மாற்றித்தர பெற்றோா்கள் மின்வாரியத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். விராலிமலை - இனாம் குளத்தூா் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 440 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறையினா் மூலம் நாா்த்தாமலை மற்றும் கோடியக்கரை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற நெகிழி பைகள் அகற்றும் பணியில், 440 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டன. மாநிலம் முழுவதும... மேலும் பார்க்க